சினிமா / TV

லீக் ஆன பராசக்தி கதை…யார் அந்த ராஜேந்திரன்…அப்போ இதிலும் சிவகார்த்திகேயன் இறந்துவாரா…!

மாணவர் ராஜேந்திரனின் வாழ்க்கை கதையா.!

இயக்குனர் சுதாகொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தன்னுடைய 25 வது படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு முதலில் புறநானுறு என்று தலைப்பு வைக்கப்பட்டது.அதன் பிறகு சிவாஜிகணேசனின் பராசக்தி பட தலைப்பை படக்குழு வைத்து டீசரை வெளியிட்டார்கள்.

நடிகர் விஜய் ஆண்டனியும் அதே தலைப்பை தன்னுடைய 25 வது படத்திற்கு வைத்துள்ளதால் பெரும் சர்ச்சை நிலவியது.இந்த நிலையில் இரு தரப்பு படக்குழுவும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பராசக்தி தலைப்பு பிரச்சனை முடிவுக்கு வந்தது.

இப்படம் ஹிந்தி எதிர்ப்பை மையப்படுத்தி உருவாகி வரும் சூழலில் சிவகார்த்திகேயன் இதில் கல்லூரி மாணவனாக நடிக்கிறார்.இப்படமும் ஒரு பயோபிக் படமாக தான் உருவாகி வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.அப்போ அந்த உண்மையான கல்லூரி மாணவன் யார் என்று ரசிகர்கள் தேடிய போது,அண்ணாமலை பல்கலைக்கழத்தில் படித்த மாணவர் ராஜேந்திரனின் வாழ்க்கையை மையமாக வைத்து தான் பராசக்தி எடுக்கப்பட்டு வருகிறது என்ற தகவல் கசிந்துள்ளது.

ராஜேந்திரன் கல்லூரி படித்து கொண்டிருக்கும் போது 1965ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி,இந்தி திணிப்பு எதிர்ப்பை போராடி தீக்குளித்த இளைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பேரணியில் கலந்து கொண்ட போது,காவல் துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் நெற்றில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இதையும் படியுங்க: லப்பர் பந்து நடிகை ஸ்வாசிகாவுக்கு மீண்டும் திருமணமா…இணையத்தில் கசிந்த புகைப்படம்…மாப்பிள்ளை இவரா..!

இவரை கௌரவிக்கும் விதமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அவருடைய திரு உருவப்படத்தை அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி திறந்து வைத்து மரியாதையை செலுத்தினார்.

பராசக்தி படத்திலும் ஒரு தமிழ் மாணவனாக நடிகர் சிவகார்த்திகேயன் ஹிந்தி எதிர்ப்புக்கு போராடுவது போல் டைட்டில் டீசரில் காட்டியுள்ளதால்,இந்த படத்திலும் சிவகார்த்திகேயன் இறந்துவிடுவார் என தெரிகிறது.ஏற்கனவே கடந்த வருடம் மேஜர் முகுந்த் பயோபிக்கில் நடித்து மாபெரும் வெற்றியை ருசித்த சிவகார்த்திகேயன்,பராசக்தி படத்திலும் ரசிகர்களின் பாராட்டை பெறுவார் என கூறப்படுகிறது.

Mariselvan

Recent Posts

ஜிவி தமிழ் சினிமாவின் பொக்கிஷம்…அனிருத் தாக்கப்பட்டாரா..பிரபல தயாரிப்பாளர் பேச்சு.!

கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…

5 hours ago

அந்த ஐட்டம் பாடலை நான் பாடி இருக்கக்கூடாது..ஓபனாக பேசிய ஷ்ரேயா கோஷல்.!

பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…

6 hours ago

நான் யாருனு காட்டுறேன்…நெருப்பை பற்றவைத்த ‘குட் பேட் அக்லி’ டீசர்.!

பட்டையை கிளப்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி…

7 hours ago

ஆட்சியரின் முட்டாள்தனமான பேச்சுக்கு காரணமே முதலமைச்சர்தான்.. அண்ணாமலை கண்டனம்!

சீர்காழி குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர்…

7 hours ago

‘குட் பேட் அக்லி’ யுனிவர்ஸ் படமா…அதை நீங்க கவனிச்சீங்களா மாமே.!

குட் பேட் அக்லி என்ன கதை அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின்…

8 hours ago

உங்களை நம்பி தான் இருக்கேன்..தியேட்டர் ஓனர்களுக்கு ‘சப்தம்’ பட இயக்குனர் வைத்த கோரிக்கை.!

கங்குவா படத்தை போல் மாற்றி விடாதீர்கள்.! தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஈரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள்…

9 hours ago

This website uses cookies.