சினிமா / TV

தனுஷை மீண்டும் இழுத்த சிவகார்த்திகேயன்.. திடீரென மாறிய முகம்!

எதிர்நீச்சல் படத்தில் இடம் பெற்றிருந்த பூமி என்ன சுத்துதே பாடலை எழுதிய தனுஷுக்கு, எஸ்கே அமரன் பட இந்தி புரொமோஷன் நிகழ்வில் நன்றி கூறியுள்ளார்.

சென்னை: கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் அமரன். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை பயோபிக் படமாக படைக்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், அமரன் திரைப்படத்தின் இந்தி புரோமோஷன் நிகழ்வு ஒன்றில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட படக் குழுவினர் பங்கேற்றனர். அப்போது, சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படத்தில் இடம் பெற்று உள்ள ‘ பூமி என்ன சுத்துதே ‘ என்ற பாடலை ஒருவர் பாடினார். தொடர்ந்து, ‘ டேமேஜ் ஆன பீஸ் நானு, ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன் ‘ என்ற லைனை பாட, சிவகார்த்திகேயனும் சேர்ந்து அப்பாடலை பாடினார்.

பின்னர், இந்தப் பாடலை எனக்காக மிக வேகமாக எழுதிய தனுஷுக்கு நன்றி என எஸ்கே கூறினார். இதனையடுத்து, அங்கு ஆரவாரம் ஏற்பட்டது. முன்னதாக, ” நான் படத்தின் மூலம் ஒருவரை உயர்த்தினேன் என கூற மாட்டேன் ” என சிவகார்த்திகேயன் ஒரு மேடையில் கூறினார். இது அப்போது சிவகார்த்திகேயன் மீது விமர்சனத்தை வீச காரணமாக அமைந்தது.

இதையும் படிங்க : தனுஷ்க்கு திருப்பி கொடுத்த SK.. மீண்டும் இணையும் கூட்டணி : வெளியான மாஸ் அப்டேட்!

ஏனென்றால், தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் துணை கதாபாத்திரமாக வெள்ளித் திரையில் சிவகார்த்திகேயன் அறிமுகம் செய்யப்பட்டதும், இது குறித்து தனுஷ் நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்ததுமே இதற்கான காரணமாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தான் அமரன் திரைப்பட விழாவில் தனுஷுக்கு சிவகார்த்திகேயன் நன்றி கூறியுள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

Hariharasudhan R

Recent Posts

பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?

நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…

7 hours ago

தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?

கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…

8 hours ago

அதிமுகவிடம் கணிசமான தொகுதிகளை கேளுங்க.. மேலிடத்துக்கு HINT கொடுத்த அண்ணாமலை!

தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…

10 hours ago

காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!

கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…

10 hours ago

நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா? கமல்ஹாசனை பற்றி பேசி ட்ரோலுக்குள்ளான சூப்பர் ஸ்டார்

உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…

11 hours ago

காதல் திருமணம் செய்த மகள் கொடூர கொலை… பெற்றோர் அரங்கேற்றிய நாடகம்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…

12 hours ago

This website uses cookies.