கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை 1986 ஆம் ஆண்டு வெளிவந்த ஆனந்த் திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். இந்தியத் திரையுலகில் நூறு படங்களுக்கு மேல் நடித்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
ரஜினியுடன் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.சில நிமிடங்களே இவர் ஜெயிலர் படத்தில் வந்திருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது.
சிவ ராஜ்குமார் நடிகர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் என்ற பன்முகத் தன்மை கொண்டவர். சிவராஜ் குமாரின் 130 வது திரைப்படத்தை பற்றிய அறிவிப்பு இப்போது வெளியாகி உள்ளது.
சிவ ராஜ்குமாரின் 130 வது படத்தை பிரபல இயக்குனர் ரவி அரசு தான் இயக்கப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சத்யஜோதி தியாகராஜன் தான் இப்படத்தை தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
இயக்குனர் ரவிஅரசு 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ஈட்டி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷை வைத்து ஐங்கரன் எனும் திரைப்படத்தை இயக்கினார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.