புடவை விற்க புது டெக்னிக்கா?.. சினேகாவால் கண் கலங்கி பேசிய பிரபலம்..!

புன்னழகை அரசி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகை சினேகா 2000ம் காலகட்டத்தில் ஓஹோஹோன்னு புகழ் பாராட்டப்பட்ட நடிகையாக தென்னிந்திய சினிமாவில் வலம் வந்தார். 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள் உருவாகினர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.

இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது. திருமணம், குழந்தை பிறப்பிற்கு பிறகு சில ஆண்டுகள் பிரேக் விட்டிருந்த சினேகா பின்னர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.

கிடைக்கும் ரோல்களில் நடித்து ஸ்கோர் செய்து வருகிறார். தற்போது தளபதி 68 படத்தில் முக்கிய ரோல் ஒன்றில் நடித்து வருகிறார். அத்துடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார். இதனிடையே ” ஸ்நேகாலயாஸ் சில்க்ஸ்” என்ற பெயரில் புதிய பிசினஸ் ஒன்றை துவங்கியுள்ளார். அதன் விளம்பர ஷூட்டிங்கில் கணவர் பிரசன்னாவுடன் சேர்ந்து ரொமான்டிக் போஸ் கொடுத்த அழகிய ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி அதனை ரசிகர்களையும் கவர்ந்துள்ளது அதிலும் ” பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்” பாடல் இந்த ரியல் ஜோடிக்கு பக்காவாக பொருந்துகிறது என ரசிகர்கள் கூறி வந்தனர்.

இந்த நிலையில், டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில், மிகவும் கஷ்டப்பட்டு வரும் போட்டியாளரான சுரேஷ் என்பவரின் ஆட்டத்தை பார்த்து வியந்திருக்கிறார் நடிகை சினேகா. இதனால், தன் வீட்டிற்கு அழைத்து விருந்து வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். சும்மா பேச்சுக்காக தான் என்று பார்த்தால் சினேகா உண்மையாகவே சுரேஷ் -ஐ தன் வீட்டிற்கு அழைத்து சென்று தரமான உணவுகளை கொடுத்து பரிமாறி இருக்கிறார்.

இதனால், கண்கலங்கி பேசிய போட்டியாளர் சுரேஷ் தற்போது, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த சம்பவம், இணையதளத்தில் கசிய சினேகா டி நகரில் ஆரம்பித்திருக்கும் சேலைக்கடையின் விளம்பரத்திற்காக தான் இப்படி எல்லாம் செய்து வருகிறார் என்றும், சில விமர்சனங்கள் எழுந்தது. ஆனால், உண்மையில் அவர் இதை விளம்பரத்திற்காக செய்யவில்லை. அப்படி விளம்பரம் தேடும் எண்ணம் இருந்தால், 100 புடவையை கொண்டு போய் ஏழை மக்களுக்கு வாரி வழங்கி விட்டு வரலாம். அவர் அப்படி செய்யவில்லை, இதனை ஆத்மாத்தமாக தான் செய்துள்ளார் என்று விமர்சகர் செய்யாறு பாலு சினேகாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

Poorni

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

10 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

11 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

12 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

13 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

14 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

15 hours ago

This website uses cookies.