“சமந்தா” அடுத்த ஜென்மத்தில் நாயாக பிறப்பாள்… சோபிதாவின் பதிவால் கொந்தளித்த பிரபலம்!

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் நட்சத்திர நடிகையாகவும் அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.

நடிகை சமந்தா ஹே மாயா சேஷாவே திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அப்படத்தின் இளம் ஹீரோவாக நடித்த நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வந்தார். கிட்டத்தட்ட 8 வருடங்களாக இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்த திருமணத்திற்கு பிறகு மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்த இந்த ஜோடி நான்கு வருடத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். ரசிகர்களின் பேவரைட் ஜோடியாக பார்க்கப்பட்ட இவர்களின் விவாகரத்து அவர்களின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது.

இன்று வரை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சமந்தா திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடிக்க ஆரம்பித்து பாலிவுட் சினிமாவிலும் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். அண்மையில் நாக சைதன்யா பிரபல நடிகையான சோபிதா துலிபாலாவை நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார். இந்த விஷயம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பிரபல பத்திரிக்கையாளர் ஆன செய்யாறு பாலுவிடம்…சோபிதா மற்றும் நாக சைதன்யா நிச்சயதார்த்தம் சமந்தா நாக சைதன்யாவுக்கு ப்ரொபோஸ் செய்த அதே தினத்தில் நடைபெற்றது. இது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது.

சோபிதா சமந்தாவை வெறுப்பேற்ற நாளில் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார் இது உண்மையா என கேட்டதற்கு…. ஆம், கிட்டத்தட்ட மறைமுகமாக சோபிதா சமந்தாவை தொடர்ந்து வெறுப்பேற்றி வருகிறார். அதுமட்டுமில்லாமல் அவர் மிகப்பெரிய ராஜ குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் சமந்தாவை ஏளனமாகவே பார்த்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இதற்கு உதாரணமாக ஒரு விஷயத்தை சொல்கிறேன் சோபிதா தனது twitter பக்கத்தில் தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட சிறு வயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு எத்தனை ஜென்மம் ஆனாலும் நான் என்னுடைய தந்தைக்கு மகளாக பிறக்க வேண்டும்.

ஆனால் சமந்தா நாயாக பிறக்க வேண்டும் என பதிவேற்றிருந்தார் . இந்த பதிவை பார்த்து எல்லோரும் கொந்தளித்து விட்டார்கள். குறிப்பாக சமந்தாவின் ரசிகர்கள் சோபிதாவை கடுமையாக திட்டி தீர்த்து வந்தார்கள்.

அதன் பிறகு தான் தெரிந்தது சோபிதாவின் தங்கை பெயரும் சமந்தா என்பது. இதுபோன்று சோபிதா தொடர்ந்து மறைமுகமாக சமந்தாவை வெறுப்பேற்றி அவரை விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது என செய்யார் பாலு கூறியிருக்கிறார்.

Anitha

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

12 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

12 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

12 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

13 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

13 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

13 hours ago

This website uses cookies.