தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்து வரும் ‘விடுதலை’ படத்தின் ஷூட்டிங், நிறைவடையும் நிலையில் போய்க்கொண்டிருக்கிறது. டிசம்பருக்குள் ‘விடுதலை’ படப்பிடிப்பு சொன்னது சொன்னபடியே முடியுமாம் என்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் சூரி மற்றும், ‘மதயானைக்கூட்டம்’ விக்ரம் சுகுமாரன் இயக்கத்திலும் நடிக்கிறார்.
அவர் சொன்ன கதை சூரிக்கு மிகவும் பிடித்துப் போய், டிசம்பரில் இருந்து கால்ஷீட் தருகிறேன் என சொல்லியிருக்கிறார் சூரி. அதைப் போல அமீர் இயக்கத்தில் சூரி நடிப்பதாக சொல்லப்பட்ட ‘இறைவன் மிகப்பெரிவன்’ படத்தில் சூரி இல்லையாம். இதற்கு அடுத்த படத்தில் தான் அமீர் – சூரி கூட்டணி இணைகிறது என பல தரப்பில் சொல்கின்றனர்.
அந்த திரைப்படம் இணைய தொடர் வகையில் ஓ.டி.டியில் வெளியாக வாய்ப்புள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடித்திருப்பதால், தன்னுடைய அடுத்தடுத்தப் படங்களை மிக கவனத்துடன் தேர்வு செய்ய சூரி திட்டமிட்டு இருக்கிறார். அந்த வகையில்தான் தற்போது விக்ரம் சுகுமாரன் கதையையும் தேர்வு செய்துள்ளார் என கூறப்படுகிறது
மற்றும் சூரி நடத்தி வரும் ஓட்டல் தனது வாடிக்கையாளர்களிடம் ஜி.எஸ்.டியை வசூலிக்காமல் உணவை விற்றதாக வணிகவரித்துறை நடத்திய அதிரடி ரெய்டால் சூரி தரப்பு அதிர்ச்சியடைந்திருக்கிறது.
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
This website uses cookies.