ப்ளீஸ் ப்ளீஸ்… அந்த நடிகையை ஹீரோயினா போடுங்க – பாலாவிடம் கெஞ்சிய சூர்யா!

உலக தமிழர்களின் பேவரைட் ஹீரோவாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. இவர் அப்பா சிவகுமார் என்ற மிகப்பெரிய அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தாலும் அவரது தனித்துவமான நடிப்பும் ஸ்டைலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 1997ம் ஆண்டு நேருக்கு நேர் படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார்.

அதன் பின்னர் நந்தா, காக்க காக்க, பிதாமகன் , பேரழகன் , வேல் , வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு, ஆறு, கஜினி , அயன் , சில்லுனு ஒரு காதல், ஆதவன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

சூர்யா காக்க காக்க படத்தில் நடித்த போது நடிகை ஜோதிகாவை காதலித்து பின்னர் 8 ஆண்டுகள் பெற்றோர்கள் சம்மதத்திற்காக காத்திருந்து திருமணம் செய்துக்கொண்டதாக கேள்விப்பட்டிருப்போம். ஆனால், சூர்யா காக்கா படத்திற்கு முன்னரே ஜோதிகாவை காதலித்து வந்தது தற்போது தெரியவந்துள்ளது.

ஆம், 2001ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான திரைப்படம் நந்தா. இப்படத்தில் லைலா ஜோடியாக நடித்திருப்பார். ஆனால் சூர்யா பலமுறை பாலாவிடம் இப்படத்தில் ஜோதிகாவை நடிக்க வையுங்கள் என கேட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து அகதியாக வரும் பெண் காதபத்திரம் என்பதால் அது ஜோதிகாவை விட லைலாவுக்கு தான் பொருத்தமாக இருக்கும் என கூறினார். அப்பவும் கேட்காமல் திரும்ப திரும்ப ஜோதிகாவை ஹீரோயினா போடலாமே என கேட்டாராம் சூர்யா.

என்னப்பா நீ புரிஞ்சிக்கவே மாட்ற அந்த நடிகையிடம் அப்படி என்ன இருக்கு? என்ன காதலிக்கிறியா? என பட்டுன்னுகேட்டுள்ளார் பாலா. அன்றிலிருந்து அந்த பேச்சை எடுக்கவில்லையாம் சூர்யா. ஆக காக்க காக்க படத்திற்கு முன்னரே சூர்யா ஜோதிகாவை ஒருதலையாக உருகி உருகி காதலித்து வந்த ரகசியம் இப்போது வெட்டவெளிச்சமாகிவிட்டது.

Ramya Shree

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

10 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

10 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

11 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

11 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

12 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

13 hours ago

This website uses cookies.