ஆந்திராவை சேர்ந்த நடிகையான சோபிதா துலிபாலா ஆரம்பதில் மாடல் அழகியாக தனது வாழ்க்கை பயணத்தை துவங்கி அதன் மூலம் கிடைத்த அறிமுகத்தை வைத்து சினிமாவில் நுழைந்தார். இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவர் 2016ம் ஆண்டு இந்தியில் வெளியான அனுராக் காஷ்யப்பின் ராமன் ராகவ் 2.0 என்ற அதிரடித் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கில் குட்டாச்சாரி, மேட் இன் ஹெவன் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
பின்னர் தமிழில் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வானிதி என்ற கேரக்டரில் நடித்து பெரும் புகழ் பெற்றார். இவர் சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யாவுடன் டேட்டிங் செய்து வருவதாக செய்திகள்அவ்வப்போது புகைப்படங்களுடன் வெளியாகியது. ஆனால், இதனை சோபிதா துலிபாலா திட்ட வட்டமாக மறுத்து வந்தார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை சோபிதா துலிபாலாவிடம் நாக சைதன்யாவுடன் வெளியாகும் காதல் கிசு கிசு குறித்து கேட்டதற்கு, உண்மை என்னவென்று தெரியாமல் பேசுபவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நான் எந்த தவறும் செய்யாதபோது, அதைப் பற்றிய விளக்கத்தை நான் ஏன் கொடுக்க வேண்டும். இதுபோன்ற பொய்யான செய்திகளுக்கு விளக்கம் கொடுத்தால் என் நேரம் தான் வீணாகும் என கோபமாக பதில் அளித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை சோபிதா துலிபாலாவின் தங்கை சமந்தா துலிபாலாவுக்கும் அவரது காதலர் சாஹில் என்பவருக்கு சமீபத்தில் பிரம்மாண்ட முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண கொண்டாட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அவர், சவுத் மீட்ஸ் நார்த் என கேப்ஷன் கொடுத்து சாஹல் டெல்லியைச் சேர்ந்தவர், என் சகோதரி ஆந்திராவைச் சேர்ந்தவர். அதனால் இரட்டிப்பான கொண்டாட்டமாக இந்த திருமணம் உள்ளது என கூறியுள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.