தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த மற்றும் வித்யாசமான கண்ணோட்டத்தில் படம் எடுப்பவர் இயக்குனர் செல்வராகவன். 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். அந்த படத்தில் தான் தனுஷையும் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு 2003ம் ஆண்டு காதல் கொண்டேன் படத்தை இயக்கினார். இப்படத்திலும் தனுஷ் தான் ஹீரோ.
இதனிடையே, காதல் கொண்டேன் படத்தின் போது தனுஷ் எல்லாம் ஒரு நடிகரா என்று அவரின் உடலை பற்றி கிண்டல் செய்து அசிங்கப்படுத்தி பலர் வந்தார்கள். அப்போது தனுஷின் காதல் கொண்டேன் படத்தினை தயாரிப்பாளரும் நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் இந்தியில் ரீமேக் செய்யலாம் என்று முடிவெடுத்துள்ளார்.
இந்தியில் செல்வராகவனே இயக்கவும் தனுஷ் தான் ஹீரோவாக நடிக்க போனி கபூர் முடிவு செய்து, படத்தின் இந்தி ரீமேக் ரைட்ஸ் வாங்கி போனி கபூர் வாங்கியுள்ளார். இதனால் கடுப்பான ஸ்ரீதேவி, என்னது தனுஷை வைத்து இந்தி ரீமேகை எடுக்க போகிறீர்களா? உங்களுக்கு என்னதான் ஆச்சு, எப்படி தனுஷ் இந்தியில் செட்டாவார் என்று ஷாக்கான ரியாக்ஷனோடு தெரிவித்து இருக்கிறார்.
ஆனால் போனி கபூர், பீகார் பகுதியில் இருந்து ஒரு பையன் படிக்க வருவது போல் காட்டிவிட்டால், தனுஷுக்கு பொருத்தமாக இருக்கும் என்றும் அடுத்த நாளே தனுஷ் மற்றும், செல்வராகவனை அழைத்து அட்வான்ஸ் பணத்தையும் போனி கபூர் கொடுத்து உள்ளார். ஆனால் அந்த படம் ஏதோ ஒருசில காரணத்தால் எடுக்கமுடியாமல் போனது.
ஆனால் காதல் கொண்டேன் படம் வெளியாகியிருந்தால், தனுஷ் பாலிவுட்டில் ஒரு முன்னணி நடிகராக திகழ்ந்து இருக்கலாம் என்று பலர் தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். 47 வயதாகும் விஷால் இதுவரை திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்.…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…
வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…
கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…
This website uses cookies.