ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அவரது திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை கண்டன. ஆதலால் இவரது கெரியரும் சரிந்தது. எனினும் விடாமுயற்சியை கைவிடாமல் நம்பிக்கையுடன் தற்போதும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரீகாந்த். இந்த நிலையில் தான் நடிக்க இருந்த முதல் திரைப்படத்தை குறித்த ஒரு தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார் நடிகர் ஸ்ரீகாந்த்.
இயக்குனர் கதிர், ஸ்ரீகாந்தை வைத்து ஒரு படம் இயக்குவதாக இருந்தாராம். ஸ்ரீகாந்த் ஒப்பந்தமான முதல் படம் அது. ஸ்ரீகாந்த் வளர்ந்தது ஹைதராபாத் என்பதால் தமிழ் உச்சரிப்பு அவருக்கு சரியாக வரவில்லை. ஆதலால் அவருக்கு ஒரு வருடம் தமிழ் சொல்லிக்கொடுத்து தயார்படுத்தினாராம்.
அதன் பின் ஒரு வருடம் கழித்து ஷூட்டிங் போகலாம் என்று ஒரு நாள் அதிகாலை காட்சி ஒன்றை படம்பிடித்தாராம். ஏ.ஆர்.ரஹ்மான் அத்திரைப்படத்திற்காக இசையமைத்த பாடலுக்கு மான்டேஜ் எடுத்தாராம். அதன் பின் காலை 9 மணி அளவில் கதிர் ஸ்ரீகாந்தை அலுவலகத்திற்கு அழைத்து திருநெல்வேலி அல்வா ஒரு துண்டை எடுத்து ஸ்ரீகாந்திற்கு கொடுத்தாராம்.
ஸ்ரீகாந்த் அல்வாவை சாப்பிட்ட பிறகு, “இந்த படம் நாம பண்ண வேண்டாம். அடுத்த படத்துக்கு நான் உன்னை கூப்பிடுறேன். இந்த படத்தில் உள்ள கதாபாத்திரத்திற்கு நீ செட் ஆகமாட்டாய்” என்று கூறிவிட்டாராம். இந்த சம்பவத்தை பகிர்ந்த ஸ்ரீகாந்த், “இனிமேல் திருநெல்வேலி அல்வாவே சாப்பிட கூடாது என்று முடிவு செய்தேன்” என்று தனக்கு நடந்த அவலமான சம்பவத்தையும் நகைச்சுவையாக கூறியது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் சூர்யாவை வைத்து இயக்கியுள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளாங்குடி பகுதியில் ரூபாய் 18 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய கட்டுமான பணிகளுக்கான பூமி…
This website uses cookies.