தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் சிம்பு,பல வருடமாக இவரைப்பற்றி உலா வந்த பல வதந்திகளுக்கு தன்னுடைய அப்டேட்டால் வாயடைத்து உள்ளார்,மேலும் சிம்பு புதிதாக ஆத்மன் சினிஆர்ட்ஸ் என்ற புது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
இதையும் படியுங்க: ‘விடாமுயற்சி’ படம் இல்லை..கார் ரேஸ் தளம்..படக்குழுவை தாக்கிய பிரபலம்..ரசிகர்கள் ஆவேசம்.!
இதனால் சிம்பு ரசிகர்கள் அளவற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.இந்த நிலையில் சிம்பு பொறியல் கல்லூரி மாணவனாக நடிக்க உள்ள STR-49 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.இப்படத்தில் அவர் மாணவனாக நடிப்பதால்,இப்படத்தில் காதல் காட்சிகள் பெரும்பாலும் இருக்க வாய்ப்பு உள்ளது,இதனால் சாய் பல்லவியை படக்குழு தேர்ந்தெடுத்துள்ளது.
சாய் பல்லவி ஏற்கனவே அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார்.மேலும் ப்ரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்து பிரபலம் ஆனவர்,அதனால் இப்படத்தில் சாய் பல்லவி மாணவியா இல்லை டீச்சரா என்பது கூடிய விரைவில் தெரிய வரும்,இருவரும் நடனத்தில் கில்லாடி என்பதால் இப்படத்தில் பாடல் காட்சிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி இப்படத்தில் சந்தானம் மீண்டும் காமெடியனாக கம்பேக் கொடுக்க உள்ளாராம்,இதனால் STR-49 படம் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.