தமிழ் சினிமாவில், இயக்குனர் அமீர் பருத்திவீரன் என்ற படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர். பருத்திவீரன் படத்தை அமீர் எடுத்துக் கொண்டிருந்தபோதே, சுப்பிரமணியபுரம் படத்தை தயாரிப்பதாக சொல்லப்பட்டு இருந்தது.
ஆனால், சில காரணங்களால் சுப்பிரமணியபுரம் படத்தை இயக்குனர் அமீர் தயாரிக்க முடியாமல் போக அந்த வாய்ப்பு நடிகரும், இயக்குனருமான சசிகுமாரிடம் சென்று உள்ளது.
இது குறித்து பேட்டியில் பேசிய அமீர், சுப்பிரமணியபுரம் படத்தில் இதற்கு முன்பு நடிக்க இருந்தது நடிகர் பாக்யராஜ் மகன் சாந்தனு என்றும், ஆனால் அப்போது, சாந்தனு வேறு ஒரு தயாரிப்பாளரிடம் முன்பணம் வாங்கி விட்டதால் இதில் நடிக்க முடியாமல் போனதாக தெரிவித்துள்ளார்.
சுப்பிரமணியபுரம் பட வாய்ப்பை விட்டதை நினைத்து சாந்தனுவருத்தப்பட்டதாக, அதன் பிறகு, இதில் நடிகர் ஜெய்யை கமிட் செய்து, சசிகுமார் நடித்து சுப்பிரமணியபுரம் படம் உருவானது. படம் உருவான பிறகு, சசிகுமார் இதை போட்டுக்காட்ட, மொத்த படத்தையும் பார்த்து நானே மிரண்டு போய் விட்டேன் என அமீர் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
படப்பிடிப்பில் முன்னணி நடிகர் ஒருவர் போதையில் தன்னிடம் அத்துமீறியதாக பிரபல நடிகை பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். இதையும் படியுங்க: சண்ட போட்டு…
This website uses cookies.