மகனும், மகளும் நடிப்பு தொழிலுக்கு வந்தால் மகிழ்ச்சி அடைவேன் என ஆந்திர சுற்றுலா துறை அமைச்சர், முன்னாள் நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.
ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சரும் முன்னாள் நடிகையும் ஆன ரோஜாவுக்கு இன்று 49 வது பிறந்தநாள். தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை திருப்பதி கோவிலில் அவர் ஏழுமலையானை வழிபட்டார்.
அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள், வேத ஆசி ஆகியவை வழங்கப்பட்டன. தொடர்ந்து கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய அவர் ஏழுமலையானை எத்தனை முறை வழிபட்டாலும் ஆசை தீராது.
மீண்டும் மீண்டும் வழிபட வேண்டும் என்ற எண்ணமே பிறக்கும்.
இறைவனின் திவ்ய மங்கள சொரூபத்தை காணும் போது கண்களில் கண்ணீர் வழிகிறது.
எங்களுடைய தெய்வம் இருக்கும் இதே ஊரில் பிறந்து, இதே ஊரில் படித்து, இதே ஊரில் வளர்ந்தது நான் செய்த அதிர்ஷ்டம்.
ஜெகன்மோகன் ரெட்டியின் ஆசிர்வாதம் காரணமாக இன்று அமைச்சராக இருக்கிறேன். அவர் மீண்டும்,மீண்டும் மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டேன்.
என்னுடைய மகன், மகள் ஆகியோர் நடிப்பு தொழிலுக்கு வந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். என்னுடைய மகள் நன்றாக படித்து விஞ்ஞானி ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
என்னுடைய மகளுக்கு சினிமா துறைக்கு வரும் ஆசை கிடையாது. ஒருவேளை அவர் திரைத்துறைக்கு வந்தால் தாயாக, கதாநாயகியாக அவருக்கு நான் துணையாக இருப்பேன் என்று அப்போது கூறினார்.
இந்த நிலையில் பிறந்த நாளை முன்னிட்டு சாமி கும்பிடுவதற்காக வந்திருந்த ரோஜாவுக்கு தேவஸ்தான அதிகாரிகள், கோவில் ஊழியர்கள், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.