நடிகர் மனோபாலா 1982ல் ஆகாய கங்கை எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பின்னர், ரஜினியின் ஊர்க்காவலன், பிள்ளை நிலா, சிறைபறவை, என் புருஷன்தான் எனக்கு மட்டும் தான் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்ளை இயக்கியுள்ளார். இயக்குநர் பாரதிராஜாவிடம் ஆரம்ப காலதில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.
மறைந்த நடிகர் மனோபாலா இயக்குநர், குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் 700 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
கடைசியாக விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வந்தார். மேலும், சதுரங்க வேட்டை உள்ளிட்ட 3 திரைப்படங்களை தயாரித்துள்ளார். லேசான மாரடைப்பு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார்.
மீண்டும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் மே மாதம் 3ம் தேதி மரணமடைந்தார். அவரது திடீர் மரணம் திரையுலகினரை பெரு அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக, சதுரங்க வேட்டை 2 திரைப்படத்தை ஆரம்பித்தார் மனோபாலா. அரவிந்த்சாமி, த்ரிஷா நடிப்பில் நிர்மல் குமார் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு படத்தின் தயாரிப்பு தொடங்கியது.
ஆனால் பல பிரச்சனைகளின் காரணமாக சதுரங்க வேட்டை 2 படம் இப்போது வரை வெளியாகவில்லை. இதற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளர் மீதி சம்பளத்தை கொடுக்க வில்லை என்று அரவிந்த்சாமி டப்பிங் பேச மறுத்துவிட்டராம். இதனால் மன உளைச்சலில் இருந்த மனோபாலா அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து, அதை தொடர்ந்து படம் வெளிவரும் என்று அறிவிப்புகள் கூட அந்த சமயத்தில் வெளியானது.
ஆனாலும் தற்போதுவரை சதுரங்க வேட்டை 2 படம் வெளிவர முடியாமல் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது. இதுவே மனோபாலாவுக்கு பெரும் மன அழுத்தத்தை கொடுத்து இருந்ததாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளனர். எப்படியாவது படத்தை வெளியிட வேண்டும் என மனோபாலா பல வழிகளிலும் முயற்சி செய்து வந்ததாராம்.
ஆனாலும் இறுதிவரை அவருடைய ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது என்று வருத்தத்துடன் தெரிவித்து வருகிறன்றனர். ஒருவேளை அரவிந்த்சாமி மட்டும் பிரச்சனை செய்யாமல் டப்பிங் பேசிக் கொடுத்திருந்தால் எப்போதோ இப்படம் வெளி வந்திருக்கும் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியும் வருகின்றனர்.
ஆதனால் அரவிந்த்சுவாமி நினைத்தால் அந்த வழக்கை விரைவில் முடித்து அந்த படத்தை வெளியிட உதவலாம் எனவும் தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் மனோபாலாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்றால் அரவிந்தசாமி இதை செய்ய வேண்டும் என்று கே. ராஜன் வேண்டுகோளையும் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.