மன உளைச்சலால் தவித்த மனோபாலா.. அரவிந்த்சாமி தான் காரணமா? -வேண்டுகோள் வைத்த பிரபலம்..!

நடிகர் மனோபாலா 1982ல் ஆகாய கங்கை எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பின்னர், ரஜினியின் ஊர்க்காவலன், பிள்ளை நிலா, சிறைபறவை, என் புருஷன்தான் எனக்கு மட்டும் தான் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்ளை இயக்கியுள்ளார். இயக்குநர் பாரதிராஜாவிடம் ஆரம்ப காலதில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

மறைந்த நடிகர் மனோபாலா இயக்குநர், குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் 700 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

கடைசியாக விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வந்தார். மேலும், சதுரங்க வேட்டை உள்ளிட்ட 3 திரைப்படங்களை தயாரித்துள்ளார். லேசான மாரடைப்பு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார்.

மீண்டும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் மே மாதம் 3ம் தேதி மரணமடைந்தார். அவரது திடீர் மரணம் திரையுலகினரை பெரு அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முன்னதாக, சதுரங்க வேட்டை 2 திரைப்படத்தை ஆரம்பித்தார் மனோபாலா. அரவிந்த்சாமி, த்ரிஷா நடிப்பில் நிர்மல் குமார் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு படத்தின் தயாரிப்பு தொடங்கியது.

ஆனால் பல பிரச்சனைகளின் காரணமாக சதுரங்க வேட்டை 2 படம் இப்போது வரை வெளியாகவில்லை. இதற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளர் மீதி சம்பளத்தை கொடுக்க வில்லை என்று அரவிந்த்சாமி டப்பிங் பேச மறுத்துவிட்டராம். இதனால் மன உளைச்சலில் இருந்த மனோபாலா அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து, அதை தொடர்ந்து படம் வெளிவரும் என்று அறிவிப்புகள் கூட அந்த சமயத்தில் வெளியானது.

ஆனாலும் தற்போதுவரை சதுரங்க வேட்டை 2 படம் வெளிவர முடியாமல் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது. இதுவே மனோபாலாவுக்கு பெரும் மன அழுத்தத்தை கொடுத்து இருந்ததாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளனர். எப்படியாவது படத்தை வெளியிட வேண்டும் என மனோபாலா பல வழிகளிலும் முயற்சி செய்து வந்ததாராம்.

ஆனாலும் இறுதிவரை அவருடைய ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது என்று வருத்தத்துடன் தெரிவித்து வருகிறன்றனர். ஒருவேளை அரவிந்த்சாமி மட்டும் பிரச்சனை செய்யாமல் டப்பிங் பேசிக் கொடுத்திருந்தால் எப்போதோ இப்படம் வெளி வந்திருக்கும் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியும் வருகின்றனர்.

ஆதனால் அரவிந்த்சுவாமி நினைத்தால் அந்த வழக்கை விரைவில் முடித்து அந்த படத்தை வெளியிட உதவலாம் எனவும் தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் மனோபாலாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்றால் அரவிந்தசாமி இதை செய்ய வேண்டும் என்று கே. ராஜன் வேண்டுகோளையும் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

சொன்னதை செய்த அண்ணாமலை.. மேலிடம் கொடுத்த ஜாக்பாட் : 9ஆம் தேதி முக்கிய அறிவிப்பு!

தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…

11 minutes ago

கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து ஆணுறுப்பை… மனைவியின் கொடூரம் : ஷாக் வீடியோ!

கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…

1 hour ago

உடை மாற்றும் அறையில் திடீரென நுழைந்த இயக்குனர்! அதிர்ந்துப்போன ஷாலினி பாண்டே…

அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…

2 hours ago

அரசு தீட்டிய திட்டம்.. கைமாறும் 400 ஏக்கர் நிலம் : போராட்டத்தில் குதித்த மாணவர்கள் கைது!

ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…

2 hours ago

அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…

17 hours ago

என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…

17 hours ago

This website uses cookies.