புஷ்பா 2 படத்தை விட,ரிலீஸின் போது ஏற்பட்ட திரையரங்கு சம்பவம் காட்டு தீ போல் பரவி வருகிறது.அதிலும் குறிப்பாக நடிகர் அல்லு அர்ஜுன் மீது அடுக்கடுக்காக புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
இதனால் படக்குழு புஷ்பா 2 வெற்றியை சந்தோசமாக கொண்டாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதனையடுத்து இன்று அல்லு அர்ஜுனிடம் போலீஸார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் புஷ்பா பட இயக்குனர் சுகுமார் சினிமாவில் இருந்து விலக ரெடி என கூறியுள்ளார்.
இதையும் படியுங்க: அல்லு அர்ஜுன் பவுன்சர் திடீர் கைது… திரையரங்கில் செய்த செயல்..வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!
சமீபத்தில் நடந்த கேம் சேஞ்சர் பட ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொண்ட சுகுமார் இந்த தகவலை கூறியுள்ளார்.சங்கர் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக ஜனவரி 10 ஆம் தேதி பான் இந்திய திரைப்படமாக வெளியாக உள்ள திரைப்படம் கேம் சேஞ்சர்.
இப்படத்தில் ராம் சரண்,அஞ்சலி,எஸ. ஜே.சூர்யா என பலர் நடித்துள்ளனர்.முன்னதாக இந்த விழாவில் பேசிய சுகுமார் இப்படத்திற்காக ராம் சரணுக்கு தேசிய விருது கிடைக்கும் என பாராட்டி இருந்தார்.
பின்பு கீழே அமர்ந்திருந்த இயக்குனர் சுகுமாரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் அவரிடம் “உங்களிடம் எதாவது ஒரு விசயத்தை விட்டுவிட சொன்னால் நீங்கள் எதை விடுவீர்கள் என்று கேட்க அதற்கு சுகுமார் சற்றும் யோசிக்காமல் சினிமா என்று கூறி…சினிமாவை விட்டு விலக விரும்புவதாக” தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அங்கிருந்த ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அதிர்ச்சி ஆகினார்கள்.பக்கத்தில் இருந்த ராம் சரண் அவரிடம் இருந்த மைக்கை புடுங்கி சினிமாவை விட்டு விலக கூடாது என கூறினார்.
ஏற்கனவே அல்லு அர்ஜுன் பிரச்சனை ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி வரும் நிலையில்,தற்போது சுகுமாரின் இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.