விஜய்க்கு ஆதரவாக சன் பிக்சர்ஸ் போட்ட பதிவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
நடிகர் விஜய் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளியான படம் சர்கார். படம் வெளியானது பெரிய சர்ச்சை வெடித்தது.
காரணம் படத்தில் கலைஞர் டிவி, மிக்சி, கிரைண்டர் போன்ற திமுக அறிவித்த இலவச பொருட்களை ஒரு விரல் புரட்சி என்ற பாடலில் இயக்குநர் போட்டு உடைப்பது போன்ற காட்சி அமைந்திருக்கும். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து படம் ரிலீசான தியேட்டர் முன்பு திமுகவினர் போராட்டம் நடத்தினர்.
ஒரு வழியாக அந்த காட்சிளை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்கும் படத்தின் தயாரிப்பாளர் திமுகவை சேர்ந்த சன் பிக்சர்ஸ்தான்.
படம் வெளியாகி விஜய் கேரியரில் மிகப்பெரிய முக்கிய படமாக அமைந்தது. 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான படம், சுமார் 250 கோடி ரூபாய் வரை வசூலித்தது.
அரசியல் பேசும் படமாக விஜய் தேர்வு செய்தால் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் இதே நாளில்தான் 2018ஆம் ஆண்டு படம் வெளியானது.
சுமார் படம் வெளியாகி 6 வருடங்கள் ஆனதை யொட்டி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் 6 YEARS OF SARKAR என்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
சர்கார் படம் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பதை உணர்த்தும் படமாகவும், நிச்சயமாக அனைவரும் ஓட்டு போட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக அமைந்தது.
அதே போல விஜய் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி முதல் மாநாட்டை வெற்றிக்கரமாக நடத்தியும் விட்டார். குறிப்பாக திமுக, பாஜகவுக்கு எதிராக விஜய் பேசியது அரசியல் கட்சியினரிடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. திமுகவினர் தவெகவை கழுவி ஊற்றி வரும் நிலையில், சன் பிக்சர்ஸ் இந்த வேலையை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.