வீட்டில் உள்ள இல்லத்தரசிகளை கட்டிப்போட்டு வைத்துள்ளது மெகா சீரியல்கள். காலையில் ஆரம்பித்த சீரியல்கள் இரவு 11 மணி வரை நீடித்துக் கொண்டே இருக்கிறது அதுவும் சீரியலுக்கு பிரபலமான சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி, கலர்ஸ், ஜீ டிவி என எல்லா டிவி சேனல்களும் தற்போது சீரியல் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து டிஆர்பியை எகிற வைத்து வருகின்றன. ஆனால் ஆரம்பத்தில் எப்படி சீரியல்களால் இல்லதரசிகளை கட்டிப்போட்டதோ இன்னும் அப்படியே மாறாமல் உள்ளது சன் டிவி.
சின்னத்திரையில் முன்னணி நடிகர்களாக வளம் வருபவர்கள் ஸ்ரீகுமார் மற்றும் சஞ்சீவ் இவர்கள் இருவருமே நெருங்கிய நண்பர்கள் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். நடிகர் சஞ்சீவ் விஜய்க்கு மிக நெருங்கிய நண்பர் என்பதை மட்டுமே நாம் அறிவோம்.
இவர்கள் இருவரும் குழந்தை பருவத்தில் இருந்து நண்பர்களாக இருந்துள்ளனர். தற்போது, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலில் சஞ்சீவ் மற்றும் ஸ்ரீகுமார் இணைந்து நடித்து வருகிறார்கள். மேலும், விரைவில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள லக்ஷ்மி என்னும் சீரியலில் சஞ்சீவ் கதையின் நாயகனாக களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், ஒருமுறை ரவுடிகள் சிலர் நடிகர் ஸ்ரீகுமாரிடம் சண்டை போட்டிருந்த சமயத்தில், அப்போது ஸ்ரீ குமாரின் கையில் கத்தியால் வெட்டியுள்ளார்கள். இதன் பின்னர் சஞ்சீவ் அந்த இடத்திற்கு வந்து ஸ்ரீ குமாரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உதவியுள்ளார். இது குறித்து, காவல் நிலையத்தில் புகார் எல்லாம் கொடுத்து விட்டார்களாம். ஆனால், இதன் பின்னர் அந்த ரவுடி கும்பல் மீண்டும் ஸ்ரீ குமாருக்கு பதிலாக சஞ்சீவை மடக்கி பிடித்து அடித்துள்ளார்கள். அந்த ரவுடிகளிடம் செம அடி வாங்கினாராம் சஞ்சீவ் இந்த விஷயத்தை ஸ்ரீகுமார் பேட்டி ஒன்றில் பங்கேற்கையில் தெரிவித்துள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.