கோலிவுட்டில் 1990களில் இருந்து பல திரைப்படங்களை இயக்கி வருகிறார் சுந்தர் சி. கிட்டத்தட்ட அவர் இயக்கிய எந்த திரைப்படமும் தோல்வியை தழுவியதில்லை என்றுதான் சொல்லவேண்டும். காமெடி திரைப்படங்கள் மட்டுமல்லாது காமெடி கலந்த ஆக்சன் திரைப்படங்கள் பலவற்றையும் ஜனரஞ்சக சினிமா ரசிகர்கள் ரசிக்கும்படி கொடுத்துள்ளார்.
ஒரு கட்டத்திற்குப் பிறகு பல திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில் சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து “கேங்கர்ஸ்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகிற 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தை சுந்தர் சியே இயக்கியும் உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது அவர் பேசிய பல விஷயங்கள் ட்ரோலுக்குள்ளாகி வருகின்றன.
“உங்கள் திரைப்படங்களில் Glamour அதிகமாக இருப்பதாக ஒரு விமர்சனம் எழுகிறதே?” என்று ஒரு கேள்வியை நிருபர் கேட்க அதற்கு சுந்தர் சி, “என்னுடைய Target Audience யார் என்று பார்த்தீர்கள் என்றால் குழந்தைகளும் Family Audience-ம் தான். அவர்கள் ரசிக்கிற மாதிரிதான் நான் படம் எடுக்கிறேன். என்னுடைய படத்தில் டபுள் மீனிங் வசனங்கள் இருக்காது. கொச்சையான பாடல் வரிகள் இருக்காது. எனது கதாநாயகிகள் Glamour ஆக வந்தாலும் கூட கேமிரா கோணம்தான் முக்கியம். புடவை கட்டி வந்தால் கூட கொச்சையாக காட்டலாம். நான் அதனை செய்யமாட்டேன்.
என்னால் முடிந்தளவு நான் அழகாக காட்டவேண்டும் என நினைப்பேன். இது வரைக்கும் எனது திரைப்படங்களில் ரேப் காட்சிகளை வைத்தது இல்லை. ஸ்பெஷல் ஐட்டம் பாடல் எதுவும் வைத்தது கிடையாது. ரத்தம் தெறிப்பது, தலையை வெட்டுவது போன்ற வன்முறை காட்சிகளை நான் வைத்தது இல்லை” என்று அவர் பதிலளித்தார்.
இப்பேட்டி இணையத்தில் வைரலான நிலையில், “உலக மகா உருட்டு” “உலக நடிப்புடா சாமி” போன்ற வசனங்களை பயன்படுத்தி இணையவாசிகள் சுந்தர் சி-ஐ ட்ரோல் செய்து வருகின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.