“கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி வருகிறார்.கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
இதில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாக நடிக்க இவருடன் ஊர்வசி, ரெஜினா கஸண்ட்ரா, மீனா, யோகி பாபு, துனியா விஜய் போன்ற பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட சமயத்தில் நயன்தாராவுக்கும் சுந்தர் சிக்கும் இடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டதாக சில செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய சுந்தர் சி, இதனை குறித்து மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார்.
“இப்படிப்பட்ட செய்தி எப்படி பரவியது என்று தெரியவில்லை. அப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை. முதலில் பொள்ளாச்சியில்தான் படப்பிடிப்பை ஆரம்பித்தோம். அந்த சமயத்தில் கேங்கர்ஸ் படத்தின் பணிகளும் எனக்கு இருந்தது.
நான் பொள்ளாச்சியில் இருந்தால் கேங்கர்ஸ் பணிகளை கவனிக்க முடியாது என்பதால் படப்பிடிப்பை சென்னைக்கு இடமாற்றினோம். நயன்தாராவை பொறுத்தவரை மிகவும் அர்ப்பணிப்பான நடிகை. எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இடைவெளியில் கேரவனுக்கு கூட போகமாட்டார். காலை படப்பிடிப்புத் தளத்திற்கு வந்தால் நான் பேக் அப் சொல்லும் வரை அந்த படப்பிடிப்புத் தளத்தை விட்டு நகரமாட்டார்.
ஆனால் எப்படி தவறான செய்திகள் வெளிவருகிறது என தெரியவில்லை. நான் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிக்கொண்டே இருக்க முடியாது அல்லவா?” என்று கூறினார். இவரது பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
ஸ்ருதிஹாசனின் பிரேக்கப் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார். இருவரும் லிவ்…
This website uses cookies.