சமீபத்தில் வெளியான கங்குவா திரைப்படம் எதிர்பார்க்கப்பட்ட வெற்றியை பெறாத நிலையில், நடிகர் சூர்யா தன்னை முடங்கி விடாமல், தனது அடுத்தடுத்த திட்டங்களை தொடர்ந்துள்ளார். தற்போது அவர் 44வது மற்றும் 45வது படங்களில் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறார்.
இன்று, சூர்யா நடிக்கும் 45வது படத்தின் பூஜை பொள்ளாச்சியில் நடைபெற்றது. இப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு வேலைகள் விரைவில் தொடங்கவுள்ளது.
சூர்யாவின் 44வது படம், கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இதை 2D எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.
இப்படத்திற்கு கல்ட் என தலைப்பை வைத்ததாக தகவல் இருந்தது. ஆனால், அதே பெயரை அதர்வா முன்னதாகவே பதிவு செய்ததால், அவரிடம் தலைப்பை வழங்குமாறு கோரப்பட்டது. அதர்வா அதை மறுத்துவிட்டார், இதனால் படக்குழு புதிய தலைப்பை தேடிக் கொண்டிருக்கிறது.
சூர்யாவின் பிறந்த நாளில் வெளியான கிளிம்ஸ் வீடியோ, படத்தின் மீதான எதிர்பார்ப்பை உயர்த்தியது. சிகரெட் புகைத்து நடந்து வரும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையும் படியுங்க: துணை நடிகையுடன் கசமுசா…பாலியல் வழக்கில் சிக்கிய புஷ்பா பட நடிகர்…
கங்குவா படத்தின் தோல்வியால் பாதிக்கப்படாமல், அடுத்தடுத்து வரும் 44 மற்றும் 45 படங்கள் மூலம், சூர்யா வெற்றிப் பாதையை நோக்கி உற்சாகமாக பயணிக்கிறார்.
கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூரில் 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் 253…
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
This website uses cookies.