தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா,கடந்த நவம்பர் 14ஆம் தேதி வெளியான கங்குவா திரைப்படத்தில் நடித்தார். பெரும் பொருட்செலவில் உருவான இந்த படம் உலகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியானாலும், அது ரசிகர்களிடையே எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.
இதைத் தொடர்ந்து, சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 என்ற படத்தில் நடித்து வருகிறார். அதற்கு பின்பு, ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கத் தொடங்கியுள்ளார். சூர்யா 45 என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இதையும் படியுங்க: தனுசுடன் மோத ரெடி..வில்லனாக மாறும் பிரபல ஹீரோ… “இட்லிக்கடை” படத்தின் அப்டேட்….
இந்த படத்தில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை திரிஷா, சூர்யாவுடன் இணைந்து கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.மேலும், சூர்யா 45 படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசை அமைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்திற்கு மேலும் பல எதிர்பார்ப்புகள் உள்ளன.
இத்திரைப்படத்தின் பூஜை இன்று பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோவிலில் துவங்கியது. இதில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி கலந்துகொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த பூஜை நிகழ்ச்சி பிறகு, சில ரசிகர்கள் கிண்டலடித்து, “இந்த படத்திற்கு மாசாணி அம்மன் என்ற டைட்டில்தான் வைக்கப் போகிறாரா?” என்று புகழ்ந்து வருகின்றனர். இதனால் படத்தின் மீதான ஆர்வமும் அதிகரித்துள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.