தமிழ் திரையுலகில் நடிகர்,பாடகர்,இயக்குனர்,தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்து தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன்.
இவர் சரிகா தாகூர் மற்றும் வாணி கணபதியை கல்யாணம் முடித்து பின்பு இருவரையும் விவாகரத்து பெற்று நடிகை கௌதமியுடன் லிவ் இன் ரிலஷன்ஷிப் இருந்தார்.அதன் பின்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பாலய்யா தொகுத்து வழங்கும் “அன்ஸ்டாப்பளிள் வித் என்.பி.கே. டாக்”ஷோவில் சீசன் 4 ல் நடிகர் சூர்யாவும் பாலிவுட் நடிகர் பாபி தியோலும் கலந்துகொண்டனர்.
அதில் தனக்கு பிடித்த உணவு,திரைப்படம் என பல வித தகவல்களை பகிர்ந்த சூர்யா. பாலய்யா கேட்ட ஒரு கேள்விக்கு மட்டும் வெட்கப்பட்டார் .
உங்களுக்கு எந்த வயதில் யார் மீது முதல் ஈர்ப்பு ஏற்பட்டது என்று கேட்பார்.சூர்யா பதில் சொல்ல தயங்கியதால் உடனே பாலய்யா சூர்யா தம்பி கார்த்திக்கு போன் செய்து பதிலை போட்டு வாங்குவார் .
கார்த்தியிடம் பாலய்யா அந்த கேள்வி கேட்கவே அதற்கு கார்த்தி சுக்குபுக்கு சுக்குபுக்கு ரயிலே என்று ஒரு பழைய பாடல் இருக்கிறது. அதில் நடித்த நடிகை தான் சார் என்று சொன்னார்.
அதை புரிந்து கொண்ட பாலய்யா கௌதமியா என்று கேட்க சூர்யா உட்பட அரங்கத்தில் இருந்த அனைவரும் சிரித்தனர்.
1993ஆம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் திரைப்படத்தில் சிக்கு புக்கு சுக்கு புக்கு ரயிலே என்ற பாடலில் பிரபுதேவாவுடன் கெளதமி நடனமாடியிருப்பார்.
கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில் சூர்யாவின் இந்த பேட்டி ரசிகர்களுக்கு இன்னும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாவில் உள்ள உச்ச நடிகர்களுடன் ஒரு பாட்டில் ஆவது தலையை காட்டி விட வேண்டும் என சக நடிகைகள் விரும்புவது…
ஓசூர் அருகே மலைக்கிராமத்தில் சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்து, அவரது கணவர் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற உறவினர்களின்…
அமீர்கானின் நெகிழ்ச்சி செயல் இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான அமீர்கான்,எப்போதும் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதோடு,தனது படங்களின் வெற்றிக்காக புதுமையான…
தங்கம் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவ் தொடர்பான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு: கடந்த மார்ச்…
விளைநிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மிரட்டல் விடுத்ததாக பிரபல ரவுடி படப்பை குணா கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம்:…
This website uses cookies.