தமிழ் திரையுலகில் நடிகர்,பாடகர்,இயக்குனர்,தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்து தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன்.
இவர் சரிகா தாகூர் மற்றும் வாணி கணபதியை கல்யாணம் முடித்து பின்பு இருவரையும் விவாகரத்து பெற்று நடிகை கௌதமியுடன் லிவ் இன் ரிலஷன்ஷிப் இருந்தார்.அதன் பின்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பாலய்யா தொகுத்து வழங்கும் “அன்ஸ்டாப்பளிள் வித் என்.பி.கே. டாக்”ஷோவில் சீசன் 4 ல் நடிகர் சூர்யாவும் பாலிவுட் நடிகர் பாபி தியோலும் கலந்துகொண்டனர்.
அதில் தனக்கு பிடித்த உணவு,திரைப்படம் என பல வித தகவல்களை பகிர்ந்த சூர்யா. பாலய்யா கேட்ட ஒரு கேள்விக்கு மட்டும் வெட்கப்பட்டார் .
உங்களுக்கு எந்த வயதில் யார் மீது முதல் ஈர்ப்பு ஏற்பட்டது என்று கேட்பார்.சூர்யா பதில் சொல்ல தயங்கியதால் உடனே பாலய்யா சூர்யா தம்பி கார்த்திக்கு போன் செய்து பதிலை போட்டு வாங்குவார் .
கார்த்தியிடம் பாலய்யா அந்த கேள்வி கேட்கவே அதற்கு கார்த்தி சுக்குபுக்கு சுக்குபுக்கு ரயிலே என்று ஒரு பழைய பாடல் இருக்கிறது. அதில் நடித்த நடிகை தான் சார் என்று சொன்னார்.
அதை புரிந்து கொண்ட பாலய்யா கௌதமியா என்று கேட்க சூர்யா உட்பட அரங்கத்தில் இருந்த அனைவரும் சிரித்தனர்.
1993ஆம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் திரைப்படத்தில் சிக்கு புக்கு சுக்கு புக்கு ரயிலே என்ற பாடலில் பிரபுதேவாவுடன் கெளதமி நடனமாடியிருப்பார்.
கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில் சூர்யாவின் இந்த பேட்டி ரசிகர்களுக்கு இன்னும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.