மும்பையை சேர்ந்தவரான நடிகை ஜோதிகா, முதலில் இந்தி படத்தில் நடித்தார். பின்னர் 1999-ம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான வாலி திரைப்படத்தின் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக சில காட்சிகளில் மட்டும் நடித்திருப்பார். ஜோதிகாவுக்கு அடுத்ததாக சூர்யாவுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்தது.
இருவரும் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் ஜோடியாக நடித்தனர். இப்படம் மூலம் தான் சூர்யா – ஜோதிகா இடையே நட்பு ஏற்பட்டு, பின்னர் அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், பேரழகன், மாயாவி போன்ற படங்களிலும் இருவரும் ஜோடியாக நடித்தனர். சுமார் 6 ஆண்டுகள் உருகி உருகி காதலித்த இந்த ஜோடி கடந்த 2006-ம் ஆண்டு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டது.
திருமணத்துக்கு பின் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார் ஜோதிகா. இவருக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் உள்ளனர். குழந்தைகள் இருவரும் வளர்ந்த பின்னரே சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கினார் ஜோதிகா. தற்போது மும்பைக்கு சென்று செட்டில் ஆகி அங்கு இந்தி திரைப்படங்களில் நடிக்க அரவம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் சூர்யா மகள் மாடர்ன் உடையில் செம அழகாக ஹீரோயின் போன்றே இருக்கும் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. மகள் தியா அழகில் அம்மா ஜோதிகாவையே ஓரம்கட்டிவிட்டதாக எல்லோரும் கூறி அவரின் அழகை வர்ணித்து கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
This website uses cookies.