வாரிசு நடிகர் என்ற பிம்பத்தை உடைத்து தனது கடின உழைப்பால் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சூர்யா.
இவர் முதன் முதலில் ஹீரோவாக நடித்த திரைப்படம் நேருக்கு நேர். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருப்பார்.
வசந்த் இயக்கிய இப்படத்தில் சூர்யா நடித்த இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடித்தவர் அஜித். ஆனால், சில காரணங்களால் அஜித் படத்திலிருந்து வெளியேறினார்.
இதன்பின் சிவகுமாரின் மகன் சூர்யாவை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளார் வசந்த்.
ஆனால், முதலில் இந்த படத்தில் தன்னுடைய மகனை நடிக்க வைக்க சிவகுமார் சம்மதிக்கவில்லை. பின் பல முயற்சிகளுக்கு பின் தான் இந்த படத்தில் சூர்யா நடிப்பதற்கு ஓகே சொல்லியுள்ளார் சிவகுமார்.
படத்தில் நடித்த முடித்தபின் சூர்யாவிற்கு சரியாக டப்பிங் பேச வரவில்லை. குரல் நன்றாக இருந்தும் இவர் வாய்ஸ் செட் ஆக வில்லை என இயக்குநர், டப்பிங் பேச நடிகர் விக்ரமை வரவழைத்துள்ளார் இயக்குனர் வசந்த்.
இதை கேள்விப்பட்ட சிவகுமார் கோபத்தில் இயக்குனர் வசந்த்தை திட்டித் தீர்த்துள்ளார். இதன்பின் சூர்யாவை வைத்தே டப்பிங் செய்து முடித்துள்ளார் இயக்குனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.