நீங்க No சொன்னா, இப்படி தான் நடக்கும்.. பிளாக்மெயில் செய்த சூர்யா – ஜோதிகா.. சிவக்குமார் ஓபன் டாக்..!

ஹிந்தி திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கிய ஜோதிகா, வாலி திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, பூவெல்லாம் கேட்டுப்பார், குஷி, முகவரி என டாப் ஹீரோக்களுடன் தொடர் வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக மாறினார். விஜய், அஜித், கமல்ஹாசன், ரஜினி என டாப் ஹீரோக்கள் ஜோடியாக நடித்து கனவு தேவதையாக மாறினார்.

சந்திரமுகி படத்தில் ஜோதிகாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதனிடையே, நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலம் முதல் சில திரைப்படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் காதல் கொண்ட நடிகர் சூர்யாவுடன் காதலில் விழுந்தார். பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ஜூன் ஆர், சில்லுனு ஒரு காதல் போன்ற திரைப்படங்களில் ஒன்றாக நடித்தனர்.

இருவீட்டாரின் சம்மதம் பெற்று திருமணம் செய்த இந்த நட்சத்திர தம்பதிக்கு தேவ் மற்றும் தியா என்ற குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்குப் பிறகு, படங்களில் நடிக்காமல் இருந்து வந்த பல வருட இடைவெளிக்குப் பிறகு கடந்த 2015ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு, ராட்சசி, தம்பி, உடன்பிறப்பே போன்ற படங்களில் பெரும்பாலும் குடும்ப பாங்கான ரோல் மட்டும் ஏற்று நடித்தார் ஜோதிகா.

தற்போது, தமிழ் சினிமாவின் ஃபேவரைட் ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகாவின் காதல் திருமணம் குறித்து பேட்டி ஒன்றில் பங்கேற்ற சிவகுமார், தனது மகன் சூர்யா திருமணம் குறித்த கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

அதாவது காதல் விஷயத்தை பற்றி சொல்லிவிட்டு நான்கு வருஷம் இருவரும் காத்திருந்ததாகவும், அதன் பிறகு, தன்னிடம் வந்து நீங்க திருமணம் செஞ்சு வைக்கலைனா இப்படியே இருந்து விடுவோம் என இருவரும் கூறியதாக தெரிவித்துள்ளார்.

தன்னை பொருத்தவரை, குழந்தையை பெற்று படிக்க வைத்து அவர்களுக்கு வேலை வாங்கி கொடுத்து சுயமாக சம்பாதிக்க ஆரம்பித்து விட்டால், அவர்களின் வாழ்க்கை பற்றி முடிவெடுக்க அவர்களுக்கு முழு உரிமை உண்டு என தெரிவித்துள்ளார்.

குடும்ப கஷ்டத்தை எல்லாம் முடித்துவிட்டு, தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள அவர்களுக்கு முழு சுதந்திரத்தை நாம் தான் வழங்க வேண்டும் என்றும், அப்படித்தான் நான் சூர்யா ஜோதிகா திருமணத்தை நடத்தி வைத்தேன் என நடிகர் சிவக்குமார் உருக்கமாக தெரிவித்தது தற்போது வைரலாகி வருகிறது.

Poorni

Recent Posts

விஜய் செய்தது போல், சினிமா தயாரிப்பதில் இருந்து உதயநிதி விலக வேண்டும் : இயக்குநர் பேரரசு!

இயக்குநர் பேரரசு திருப்பாச்சி படம் இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சிவகாசி, திருப்பதி, திருவண்ணாமலை, பழனி, தர்மபுரி,…

5 minutes ago

நீ இந்தியாவுக்கு வந்த அவ்வளவு தான்…தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு மிரட்டல்.!

உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு நேர்ந்த கொடுமை! இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி,2021 டி20 உலகக் கோப்பைக்குப்…

14 minutes ago

படத்தோட பேரு தெரியாம நடிச்சேன்.. ‘பெருசு’ பொருத்தமான தலைப்பு.. ரசிகர்களுடன் படம் பார்த்த நடிகர் பேட்டி!

பெருசு டைட்டில் படத்திற்கு சரியான தலைப்பு இயக்குனர் வைத்துள்ளார் என திருச்சியில் நடிகர் பாலசரவணன் கூறியுள்ளார். ஸ்டோன் பீச் பிலிம்ஸ்,…

19 minutes ago

27 தடவை..தங்க கடத்தலுக்கு உதவியது யார்? அதிகாரிகளை திணறடித்த நடிகை ரன்யா ராவ்.!

தங்கக் கடத்தல் பின்னணியில் உள்ள சதி நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியிருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை…

1 hour ago

கடனை திருப்பி கேட்ட வங்கி.. விவசாய கடனை செலுத்த முடியாத திமுக நிர்வாகி விபரீத முடிவு!

திருவள்ளூர் மாவட்டம் வேலூர் ஊராட்சியில் வசித்து வருபவர் முத்துராஜ். 60 வயதான இவருக்கு சுசீலா என்ற மனைவியும், நான்கு மகன்கள்…

2 hours ago

This website uses cookies.