சூர்யா கங்குவா படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு என்ற திரைப்படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. சூர்யா மற்றும் சுதா கொங்கரா கூட்டணியில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் சூரரைப்போற்று திரைப்படம் சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்று தந்தது.
சூர்யா மற்றும் சுதா கொங்கரா இணைவதாக வந்த அறிவிப்பு ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியது. ஆனால் இவர்கள் இணைவதாக சொன்ன புறநானூறு திரைப்படத்தை பற்றி இடையில் எந்த தகவலும் இல்லை.திடீரென புறநானூறு திரைப்படம் தள்ளிப்போவதாக இயக்குனர் சுதா கொங்காரா அறிவித்தார்.
புறநாநூறு கதையில் சூர்யாவிற்கு உடன்பாடு இல்லை எனவும் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சூர்யா இப்படத்தில் இருந்து விலகியதாகவும் பேசப்பட்டது. இதையடுத்து சுதா கொங்காரா சிவகார்த்திகேயனை வைத்து புறநானூரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் திரை வட்டாரம் சொன்னது.
இந்நிலையில் சண்டை மறந்து மீண்டும் சூர்யா சுதா கொங்கராவை மும்பையில் சந்தித்ததாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் ஒரு தேசிய விருது திரைப்படத்தை எதிர்பார்க்கலாம் என்று பேசிக் கொள்கின்றனர் நெட்டிசன்கள்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.