அஜித் செஞ்சது ரொம்ப தப்பு… அந்த விஷயத்தில் அவரை மன்னிக்கவே மாட்டேன் – தமன்னா!

2005ம் ஆண்டு தனது 15 வயதில் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து, தமிழில் கேடி என்னும் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த இவர், படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் போல இருந்ததாக ரசிகர்களும் பத்திரிக்கைகளும் வர்ணித்தது.

இதனைத் தொடர்ந்து, வியாபாரி படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தார். பின்னர், கல்லூரி, படிக்காதவன், அயன், சுறா, பையா, கண்டேன் காதலை போன்ற திரைப்படங்கள் மூலம் தனது நேர்த்தியான நடிப்பு, பால் நிற தேகம் என ரசிகர்களை சுத்தலில்விட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாக உள்ளார்.

இவர் நடிப்பில் கடைசியாக ஆக்ஷன் திரைப்படம் தமிழில் வெளிவந்தது. இதன்பின் தமிழில் எந்த ஒரு படத்திலும் தமன்னா நடிக்கவில்லை. ஆனால், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தியில் தயாராகிய ஆந்தாலஜி படமாக லஸ்ட் ஸ்டோரி 2 படத்தில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். அதையடுத்து தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னா நடித்து வருகிறார்.

குறிப்பாக ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு தமன்னா போட்ட தமிழ்நாடு முழுக்க பரவலாக பேசப்பட்டது. தற்ப்போது பீக்கில் இருக்கும் நடிகைகள் லிஸ்டில் தமன்னாவும் இடம் பிடித்துவிட்டார். அதற்காகவே அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக அதில் தமன்னாவின் நடனம் எல்லோரையும் கவர்ந்து எக்கசக்க ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி சோஷியல் மீடியாக்களில் அனல் பறந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை தமன்னா அஜித் குறித்து பேசியுள்ளார். அதாவது அஜித்தின் வீரம் படத்தில் நடித்தபோது அவரின் வயதான தோற்றம் உங்களுக்கு செட் ஆகவில்லை. நீங்களும் இப்படி நினைத்தீர்களா? அவர் டைய் அடித்துக்கொண்டு யங் மேன் லுக்கில் நடித்திருந்தால் உங்களின் பேர் மேட்ச் சிறப்பாக இருந்திருக்கும் என்று? என கேட்டதற்கு…. ஆம், நினைத்தேன்.

உண்மையில் எனக்கும் அது பிடிக்கவில்லை. ஆனால் இப்போது எனக்கு இருக்கும் சுதந்திரம் அப்போ யாரும் கொடுக்கவில்லை. அதனால் என் விருப்பத்தை கூட தெரிவிக்கமுடியாத ஒரு நிலையில் தான் நான் நடித்தேன். இப்போ மாதிரி என்றால் நிச்சயம் கேட்ருப்பேன். என் விருப்பத்தை சொல்லியிருப்பேன். தலைக்கு டை அடிக்காமல் இருப்பது தனிப்பட்ட நபராக அஜித்திற்கு சரியாக படலாம்.

ஆனால், ஒரு திரைப்படம் என்பது பலகோடி ரசிகர்களை சென்றடையும். பத்து பேர் இணைந்து ஒரு படத்தை உருவாக்கும் பொழுதுஅவர்களுடைய கருத்தை கேட்டு அவர்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வது ஒரு நடிகருடைய கடமை. அதுதான் சிறந்த நடிகருக்கு அர்த்தம். எனவே நடிகர் அஜித் தன்னுடைய முடிக்கு டை அடித்துக் கொண்டு நடிப்பதில் தவறில்லை. வீரம் படத்தில் அப்படி செய்தது ஏற்றுக்கொள்ளமுடியாதது தான் என வெளிப்படையாக கூறினார்.

Ramya Shree

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

7 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

8 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

9 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

10 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

12 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

13 hours ago

This website uses cookies.