தமிழ் திரையுலகில் தற்போது அனைத்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கும் இசையமைத்து வரும் ஒரே இசையமைப்பாளர் அனிருத். ரஜினி நடிப்பில் உருவாகும் ஜெயிலர், விஜய் நடிப்பில் உருவாகும் லியோ, கமல் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 , ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ளாள் ஜவான் என பிரபலங்களின் திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக புக் ஆகி படு பிசியாக இருந்து வருகிறார்.
தனுஷின் 3 படத்தின் மூலம் அறிமுகமான இவர், முதல் படம் முதலே மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து, திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துவிட்டார். தற்போது தென்னிந்திய திரையுலகில் தவிர்க்கமுடியாத இடத்தை பிடித்துள்ள அனிருத் கோலிவுட்டை தாண்டி பாலிவுட்டில் அடிக்கல் நாட்ட உள்ளார்.
தொடர்ந்து இடைவெளி இல்லாமல் பல ஹீரோக்களுக்கு மாசான வெற்றி கொடுத்து வரும் அனிருத் ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமானை விட அதிக சம்பளம் வாங்குகிறாராம். ஆம், ஏ ஆர் ரகுமான் ஒரு படத்திற்கு ரூ. 8 கோடி சம்பளம் வாங்குகிறார். ஆனால், அனிருத் ஜவான் படத்திற்கு இசையமைக்க ரூ. 10 கோடி சம்பளம் வாங்கியிருப்பது திரையுலகினரை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
மேலும், அனிருத் ஒரு படத்திற்கு இசையமைக்க நாலு கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம். இந்நிலையில், படத்தை விட பாட்டு கச்சேரி நிகழ்ச்சிகளுக்கு ரூபாய் 5 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார். ஒரே ஒரு நாள் பாட்டு கச்சேரிக்கு 5 கோடி சம்பளமா என இதை கேள்விப்பட்ட பிரபலங்கள் வாய்யடைத்து போய்விட்டார்களாம்.
வெளிநாட்டில் கச்சேரிக்கு சென்றால், கூடவே வடநாட்டு பாடகி ஒருவரை அழைத்து செல்கிறாராம். ஸ்டேஜில் கச்சேரி முடிந்ததும் ரூமில் இவர்கள் கச்சேரி தொடங்கி விடுவதாக தற்போது கோலிவுட்டில் தகவல் வெளியாகி உள்ளது.
மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…
சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…
சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
This website uses cookies.