சினிமா / TV

சன் டிவியின் முக்கிய சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகை…இன்ஸ்டா பதிவால் சோகத்தில் ரசிகர்கள்..!

ஆனந்த ராகம் சீரியலில் இருந்து விலகிய அபி

தமிழ் சீரியல்களில் காலம் காலமாக நடிகர் நடிகைகைகள் தாங்கள் நடித்து வரும் சீரியல்களில் இருந்து விலகுவது நீடித்து கொண்டு இருக்கிறது.

சில பேர் தங்களுடைய தனிப்பட்ட காரணங்களாலும் வேறு சிலர் வேற ஏதாவுது புது சீரியலில் நடிக்க கமிட் ஆகி விடுவதால்,ஏற்கனவே நடித்து கொண்டிருக்கும் சீரியலில் இருந்து விலகி விடுகின்றனர்.

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியலில் அபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்வேதா,தற்போது சீரியலில் இருந்து விலகுவதாக தன்னுடயை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று நல்ல டிஆர்பி-யில் இருக்கும் ஆனந்த ராகம் சீரியலில் இருந்து இவர் விலகுவது ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

இதையும் படியுங்க: சைஃப் அலி கான் வீட்டில் நடந்தது என்ன… கேமராவில் வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்..!

அவர் வெளியிட்டுள்ள பதிவில் 750 எபிசோடு என்னுடைய ரோல் முடிகிறது.இந்த சீரியலில் அபியாக என்னை கொண்டாடிய அணைத்து ரசிகர்களுக்கும்,என்னுடைய டீமுக்கும் ரொம்ப நன்றி,நீங்கள் கொடுத்த அளவில்லா அன்பிற்கு இந்த அபி எப்போதும் கடமைப்பட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம் வர போகிறது என்று கூறியுள்ளார்,இதனால் நடிகை ஸ்வேதாக்கு விரைவில் திருமணம் ஆக வாய்ப்பு உள்ளது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Mariselvan

Recent Posts

விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!

நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…

8 hours ago

ஹரிஷ் கல்யாண் படத்தில் வெற்றிமாறனின் இன்னொரு அவதாரம்? வேற லெவல்ல இருக்கப்போது…

வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…

9 hours ago

கோவில் திருவிழாவில் பரபரப்பு… 6 மாத குழந்தையுடன் குண்டத்தில் இறங்கிய போது தவறி விழுந்த பக்தர்..(வீடியோ)!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…

10 hours ago

வாய் பேச முடியாத 14 வயது சிறுமி.. வனப்பகுதிக்குள் நடந்த வன்புணர்வு : கோவையில் பகீர்!

கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…

10 hours ago

டிரைலரும் ரெடி, மூணாவது சிங்கிளும் ரெடி! குட் பேட் அக்லி திரைப்படத்தின் மாஸ் அப்டேட்…

எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…

10 hours ago

This website uses cookies.