கேஜிஎப் 2 படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது .Pan india திரைப்படமான இது இந்தியா முழுவதும் வெளியாகி வசூல் சாதனைகள் புரிந்து வருகிறது. தற்போது இந்திய பாக்ஸ் ஆபிஸை அதிரவைத்துக்கொண்டிருக்கிறது இந்த கேஜிஎப் 2 திரைபடம்.
கேஜிஎப் தயாரிப்பாளர் Hombale Films அடுத்து ‘இறுதி சுற்று’ , ‘சூரரை போற்று’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் சுதா கொங்கரா உடன் கூட்டணி சேர்வதாக அதிகாரபூர்வமாக சமூக வலைத்தளங்களில் அறிவித்து இருக்கின்றனர். ‘சூரரை போற்று’ வின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து Hombale Films இயக்குனர் சுதா கொங்காராவுடன் கூட்டணி சேர்ந்து இருப்பதால் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .
Hombale Films தயாரித்த கேஜிஎப் 1 ,கேஜிஎப் 2 ஆகிய இரண்டு படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்க உள்ள படமும் Pan india படமாக தான் வெளியாகும் . இயக்குனர் சுதா கொங்கரா இயக்க உள்ள இந்த படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படம் என்றும் தயாரிப்பு நிறுவனமான Hombale Films தெரிவித்துள்ளனர்.
சுதா கொங்கரா இயக்க உள்ள இந்த படத்தில் யார் யார் நடிக்க உள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை இருப்பினும் சினிமாவட்டாரத்தில் சிலர் இந்த படத்தில் சூர்யா தான் ஹீரோவாக நடிக்கிறார் மற்றும் மேலும் ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்று கூறிவருகின்றனர் . இதனால் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கவுண்ட்டர் மணி… கோலிவுட் வரலாற்றில் கவுண்ட்டர் வசனங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தவர் கவுண்டமணி. சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு ஆயிரத்திற்கும்…
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி அருகே உள்ள சுரைக்காய்பட்ட கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி கூலித்தொழிலாளி. இவரது மனைவி…
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் உறவினரும் போக்சோ வில் கைது செய்யப்பட்டு…
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்…
சமீபத்தில் திமுகவில் சேர்ந்து புதிய பதவிக்கு தேர்வான சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ், ஒரு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்யை…
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பழைய நகரத்தை சேர்ந்த கணேஷ், ஜோஸ்னாவும் வேலைக்காக பெங்களூரு சென்றனர். இவர்களுக்கு அனந்தபூர் மாவட்டம் குந்தகல்லை…
This website uses cookies.