சென்னை: விஜய் டிவி பிரபலம் மற்றும் சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயனை போலீசார் கைது செய்தனர்.
சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது சூர்யாதேவி என்ற யூடியூபர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், நாஞ்சில் விஜயன் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக நாஞ்சில் விஜயனுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு பல்வேறு சம்மன்கள் அனுப்பப்பட்ட நிலையிலும், விசாரணைக்கு ஆஜராகவில்லை என தெரியவருகிறது.
இந்த நிலையில் சென்னையில் இன்று நடிகர் நாஞ்சில் விஜயனை போலீசார் கைது செய்தனர். தற்போது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் நாஞ்சில் விஜயனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோவை குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே நடைபெற்ற மோதலில் சுண்ணாம்பு காளவாய் பகுதியைச்…
சின்னத்திரையில் பிரபலமானால் போதும் பெரிய திரையில் தானாகவே வாய்ப்புகள் வந்து விழும். இது இந்த காலத்தில் எழுதப்படாத விதியாக உள்ளது…
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
This website uses cookies.