விஜய்க்கு மரியாதை அவ்வளவு தான்..! வாரிசுக்கு 35- சதவீத திரையரங்குகள் தான் கொடுப்பாங்க.. பிரபல தயாரிப்பாளரின் பேச்சால் ரசிகர்கள் அப்செட்..!

விஜயின் வாரிசுக்கு குறைவான திரையரங்குகளே ஒதுக்கப்பட்டிப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அது குறித்து பிரபல தயாரிப்பாளர் தனது காரசாரமான கருத்தை முன்வைத்திருக்கிறார்.

நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வாரிசு’ திரைப்படமும், அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘துணிவு’ திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. மிக நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் மோத இருப்பதால், இரு தரப்பு ரசிகர்களும் அதிக எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

இதில் துணிவு படத்தை வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனமும், வாரிசு படத்தின் வெளியிடும் உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனமும் கைப்பற்றி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவில், அதிக செல்வாக்கு உள்ள உதயநிதி, துணிவு படத்திற்கு அதிக அளவு திரையரங்குகளை கைப்பற்றி விட்டதாக தகவல் வெளியானது.

இதனை உதயநிதி ஸ்டாலின் மறுத்திருந்த போதும், அது குறித்தான சர்ச்சை இன்னும் ஓய்ந்த பாடில்லை. இதற்கிடையே வாரிசு படத்திற்கு தெலுங்கில் முன்னுரிமை கொடுக்கமுடியாது என்று தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டு இருந்ததும் தமிழ் சினிமாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இது குறித்த தனது கார சாரமான கருத்தை பிரபல தயாரிப்பாளர் ராஜன் முன்வைத்துள்ளார்.

இது குறித்து அவர் பேசும் போது, “ அது தவறான கணக்கு. விஜய்க்கு 300 திரையரங்குகள்.. அஜித்திற்கு 800 திரையரங்குகள் என்றெல்லாம் கொடுக்கமாட்டார்கள். அது மனசாட்சிக்கு விரோதமானது. திரையரங்குகள் இருவருக்கும் சமமாக பிரித்துக்கொடுக்கப்படும்.

தெலுங்கு திரையுலகம் அங்குள்ள சினிமாவை காப்பாற்ற முயற்சிக்கிறது. விஜய் படம் இங்கும் ரிலீஸ் ஆகிறது, அங்கும் ரிலீஸ் ஆகிறது. ஆனால் பாலகிருஷ்ணா படம் இங்கு ரிலீஸ் ஆகிறதா? அதனால், அங்கு தயாரிப்பாளர்களின் முதலீட்டை காப்பாற்றுவதற்தாக, முயற்சிகள் நடக்கிறது. வாரிசு படத்தின் தயாரிப்பு, இயக்கம் என இரண்டுமே தெலுங்கை சேர்ந்தவர்கள்தான்.

அங்கு தெலுங்கு நடிகர்கள் நல்ல ஒத்துழைப்பை கொடுக்கிறார்கள். அப்படி இருக்கும் போது அவர்களை வைத்து படம் எடுப்பதை விட்டு விட்டு, தமிழ் ஹீரோவுக்கு 25 கோடி அதிகமாக கொடுத்து படம் எடுக்கிறார் வாரிசு படத்தின் தயாரிப்பாளர். இதனால் தமிழ் சினிமாவின் மார்க்கெட் கெடுகிறது. இனி விஜய் தற்போது வாங்கும் சம்பளத்தை குறைப்பாரா?

அஜித் விஜய் ஆகிய இரண்டு பேரின் படங்களும் நன்றாக ஓட வேண்டும். ஆனால் அவர்களால் தெலுங்கு மார்க்கெட் குறைவதற்கு தெலுங்கு சினிமாவை சேர்ந்தவர்கள் விரும்ப வில்லை. ஆனால் வாரிசு அங்கு நிச்சயமாக வெளியாகும். ஆனால் 35 சதவீதம் அளவிலேயே திரையரங்குகள் கொடுக்கப்படும். அங்கு விஜய்க்கு மரியாதை அவ்வளவுதான்.” என்று பேசினார்.

Poorni

Recent Posts

இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…

2 hours ago

பயங்கரவாதிகளை தேடி தேடி ஒழிக்க வேண்டும் : துணை முதலமைச்சர் பரபரப்பு பேச்சு..!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…

3 hours ago

கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?

புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…

3 hours ago

கட்டுனா மாமனை மட்டும் தான் கட்டுவேன் : ஒரே மேடையில் இரு பெண்களுடன் இளைஞர் திருமணம்..(வீடியோ)!

தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…

4 hours ago

அய்யோ; இது சுத்த பொய்- பதறிப்போய் ஓடி வந்த அஜித்தின் மேனேஜர்? அப்படி என்ன நடந்திருக்கும்?

அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…

4 hours ago

திருமாவுடன் கைக்கோர்க்கும் ராமதாஸ்.. 14 ஆண்டுகளுக்கு பின் மனமாற்றம் : ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்!

தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…

4 hours ago

This website uses cookies.