காலை உணவு 8 பாதாம்.. தங்கலான் படத்திற்காக இவ்வளவு விஷயம் பண்ணி இருக்காரா விக்ரம்..!

Author: Vignesh
1 ஆகஸ்ட் 2024, 5:07 மணி
Quick Share

தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷ நடிகரான விக்ரம் பல வித்யாசமான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து மிரட்டலான நடிப்பால் ரசிகர்களை மிரள வைப்பார். அப்படிதான் தற்போது ஞானவேல்ராஜா தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் திரைப்படத்தில் மிரட்டலான வேடத்தில் நடித்து வருகிறார். பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக, திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில வாரங்களை இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி, படத்தின் முக்கிய பிரபலங்கள் விக்ரம், மாளவிகா மோகன், பார்வதி, பா ரஞ்சித், ஜிவி பிரகாஷ் மற்றும் ஞானவேல் ராஜா கேரளாவில் பிரமோஷன் பணிகள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த படத்திற்காக விக்ரமின் ஈடுபாடு குறித்து படத்தில் விக்ரமின் மகனாக நடித்த நடிகர் அர்ஜுன் பேசியுள்ளார். அதில், ஒரு சில காட்சிகளில் அவரின் நடிப்பை பார்த்து மிரண்டு விட்டேன். ஒருநாள் காலையில், எனக்கு ஒரு பாதம் கொடுத்தார். மேலும், இதுதான் எனது காலை உணவு என்றும் கூறினார். நான் ஏன் என கேட்டேன். உடனே அவர், இந்த கதாபாத்திரத்திற்கான உடல் அமைப்புக்கு இதுதான் சரி தினமும் காலை உணவுக்கு எட்டு பாதாம் மட்டும்தான். அதில், இன்றைக்கு ஒரு பாதாமை உனக்கு கொடுத்துவிட்டேன் என்று தெரிவித்தார். தனது கதாபாத்திரத்திற்காக விக்ரம் சாரின் மெனக்கிடல் என்னை வியப்பில் ஆழ்த்தியது என்று பேசியுள்ளார்.

  • PK என்ன ஒரு தைரியம்… புதிய கட்சியை தொடங்கி மதுக்கடைகளை திறப்பேன் என பிரசாந்த் கிஷோர் வாக்குறுதி!
  • Views: - 202

    0

    0