ஆரம்ப காலகட்டத்தில் கதாநாயகியாக நடித்து வந்தவர் நடிகை கௌசல்யா இப்போது, குணசித்திர வேடங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கௌசல்யா தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் ஒன்றை பற்றி பேசியுள்ளார்.
அதில், நான் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்த திரைப்படத்தின் இயக்குனர் தங்கப்பச்சான் அந்த படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். ஒரு காட்சியில் அவர் சொல்லிக் கொடுத்ததை நான் சரியாக செய்யவில்லை.
உடனே அவர் நீ எல்லாம் குரங்கு மூஞ்சிய வச்சுக்கிட்டு எதுக்கு நடிக்க வர என்று என்னை பார்த்து திட்டினார். எல்லோர் முன்பும் என்னை அப்படி திட்டியது எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது. ஆனாலும், நம் வாங்கும் சம்பளத்திற்காக வேலை செய்யவில்லை. ஒரு விஷயத்தை நான் சரியாக செய்ய வேண்டும் என்று நினைத்து அவர் திட்டியதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால், அவர் எந்த காட்சிக்காக இப்படி திட்டினார்கள் என்று எனக்கு எப்போதும் நினைவுக்கு வரவில்லை. அவர் திட்டியது மட்டும் என்னால் மறக்க முடியாது. அவர் அப்படி திட்டியதால், அடுத்து நாம் சரியாக வேலை செய்ய வேண்டும் இல்லை என்றால் அவர் திட்டுவார் என்ற பயம் இருந்தது.
இதேபோல நிறைய இயக்குனர்களிடம் திட்டுவாங்கி இருக்கிறேன். ஆனால், அதை ஒரு பாடமாக எடுத்து மீண்டும் அதை செய்யக்கூடாது என்று முயற்சி செய்து நடித்திருக்கிறேன். அதிலிருந்து, நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று அந்த பேட்டியில் கௌசல்யா பேசியிருந்தார்.
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…
This website uses cookies.