தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை வைத்திருப்பவர் கமல்ஹாசன், உலகமெங்கும் இவருக்கு ரசிகர்கள் உண்டு. இதனால் உலக நாயகன் என அறியப்படுகிறார்.
இவரின் நடிப்புக்கு ஈடு இணையே ஏதும் இல்லை. அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான படம் தான் வேட்டையாடு விளையாடு. இந்த படத்தில் நடித்த போது ஓடாது என நினைத்துள்ளார் கமல்.
இது குறித்து இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ள தகவல்தான் இது.
வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் பல காட்சிகள் அமெரிக்காவில் தான் படமாக்கப்பட்டது. அப்போது அங்கே கமல்ஹாசனையும் ஜோதிகாவையும் பல நாட்கள் நடக்க வைத்துக்கொண்டே இருந்தார்களாம்.
வெண்ணிலவே பாடலிலும் நடக்க வைத்திருப்பார் இயக்குநர் கௌதம் மேனன். ஆனால் அப்போது கமல்ஹாசன், என்ன நடக்க வைத்துக்கொண்டே இருக்கிறார் என எண்ணினாராம்.
இதனால் கடுப்பான கமல், தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணனை தொடர்பு கொண்டு உன்னுடைய காசை இவனுங்க வீணடிச்சிட்டு இருக்காங்க, நீ உடனே அமெரிக்காவுக்கு கிளம்பி வா. இவுங்க ஒரு காட்சிகூட எடுக்கவில்லை என கூறினாராம்.
ஆனால் மாணிக்கம் நாராயணன், எனக்கு கௌதம் மேனன் மேல் நம்பிக்கை இருக்கிறது. ஆதலால் கவலைப்படாதீர்கள் என கூறினாராம்.
இதே போல் மற்றொரு நாள் கமல்ஹாசன், எனக்கு உட்கார இருக்கைகளே போட மாட்டிக்கிறார்கள் என கூறினாராம். அப்போது மாணிக்கம் நாராயணன், எனது பையன் அமெரிக்காவில்தான் படிக்கிறான். அவனை சேர் எடுத்துக்கொண்டு வரச்சொல்கிறேன் என கூறியிருக்கிறார்.
அதற்கு கமல்ஹாசன், இல்லை, வேண்டாம். தேவையில்லாமல் செலவு வைக்காதே என கூறியிருக்கிறார். அதற்கு மாணிக்கம் நாராயணன், சார் நீங்க ஒரு லெஜண்டு. அதனால் உங்களை திருப்தியாக வைத்துக்கொள்ள வேண்டியது எனது கடமை என்று பதிலளித்திருக்கிறார்.
அதனை தொடர்ந்து மாணிக்கம் நாராயணன், அமெரிக்காவில் உள்ள தனது மகனிடம் 4 சேர்களை எடுத்துக்கொண்டு படப்பிடிப்புத் தளத்திற்கு போகச்சொல்லி ,அங்கே கமல்ஹாசனை உட்கார வைத்து அவர் கூடவே பத்து நாட்கள் இரு, அவருக்கு வேண்டியதை செய் என கூறியிருக்கிறார்.
அதன் பிறகு அவரது மகன் சேர்களை எடுத்துக்கொண்டு படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றுள்ளார். படப்பிடிப்பு முடிந்த பின்பும் கமல்ஹாசனுக்கு இத்திரைப்படத்தின் மேல் நம்பிக்கையே இல்லையாம்.
ஆனால் வேட்டையாடு விளையாடு திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. ஆனால் பல பொருளாதார சிக்கல்களால் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணனுக்கு நஷ்டம் ஏற்பட்டதுவிட்டது என்பதுதான் சோகம்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.