கள்ளக்காதலால் காமெடி நடிகரின் கால்களை உடைத்த கும்பல்.. உயிருக்கு போராட்டம் : விசாரணையில் பகீர்!!

கள்ளக்காதலால் காமெடி நடிகரின் கால்களை உடைத்த கும்பல்.. உயிருக்கு போராட்டம் : விசாரணையில் பகீர்!!

சன் டிவி, விஜய் டிவி போன்ற சின்னத்திரையில் மிகப் பிரபலமான காமெடி நடிகரும், “கலக்கப்போவது யாரு” “அசத்தப்போவது யாரு” நிகழ்ச்சிகளில் தனது பன்முகத்திறமையால் தரமான காமெடி செய்ததன் மூலமாக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் வெங்கடேஷ்.

அவருடன் சேர்ந்து கிறிஸ்டோபர், சசி, பாலா என்ற நான்கு நபர்களும் செய்யும் காமெடிக்கு மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பும் ஆதரவும் அவருக்கு இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8:45 மணி அளவில் தனது காரில் அவரும், அவரது டிரைவரும் சென்று கொண்டிருந்தபோது வழியில் மூன்று நபர்கள் வழிமறித்து டிரைவரை மிரட்டி, அங்கிருந்து ஓட செய்துவிட்டு, வெங்கிடேசை காருடன் கடத்தி சென்று, ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து, அவரை காரில் இருந்து கீழே இறக்கி கதற, கதற அடித்து, உதைத்து இரண்டு கால்களையும் அடித்து உடைத்துள்ளனர்.

வெங்கடேசின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தவுடன், அவரை கொடூரமாக தாக்கியவர்கள் இந்த சம்பவத்தை திசை திருப்ப இரண்டு உருட்டு கட்டைகளையும், ஒரு பிஜேபி கட்சியின் துண்டையும் அங்கே போட்டு விட்டு தப்பி சென்றுள்ளார்கள்.

இரண்டு கால்களும் உடைபட்ட நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெங்கடேசை பொதுமக்கள் மீட்டு, காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் காரில் இருந்து இறங்கி ஓடிய டிரைவர் மோகன் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். வெங்கடேசை பார்த்து கதறி அழுத டிரைவர் காவல்துறை உதவியோடு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

அதன் பிறகு தான் இந்த சம்பவத்தில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. வெங்கடேசை அடித்து உதைத்து, கால்களை உடைத்த நபர்கள் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களா? எதற்காக அவரை அடித்து கால்களை உடைத்து விட்டு, அங்கே பாரதிய ஜனதா கட்சியின் கட்சி துண்டை கீழே வீசி சென்றார்கள்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் வேறு யாராவது ஈடுபட்டுள்ளார்களா? என தங்களது பாணியில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அவர்களுடைய விசாரணையில் முதலில் சிக்கியவர் வெங்கடேசனின் கார் டிரைவர் மோகன் தான். எதற்காக காரை விட்டு இறங்கி ஓடியவர், எப்படி இவர் இருக்கும் இடம் தேடி வந்தார்.

இது போன்ற பல்வேறு கோணங்களில் டிரைவரிடம் தங்களுடைய பாணியில் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது.

இந்த விசாரணையில் முக்கிய குற்றவாளியாக வெங்கடேசனின் காதல் மனைவி ஈடுபட்டுள்ளது, பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய காதல் மனைவி மற்றும் காவல் துறையில் உள்ள மனைவியின் அக்கா மகன் ராஜ்குமார் ஆகியோர் ஆலோசனையின் பேரிலேயே டிரைவர் மோகன் மற்றும் கூலி படையினர் மூன்று பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

விசாரணையில் காதல் திருமணம் செய்து கொண்ட வெங்கடேஷ்க்கும், அவரது மனைவிக்கும் இடையே கடந்த ஐந்து வருடங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் வெங்கடேசனின் டிரைவருக்கும், அவரது மனைவிக்கும் உள்ள நட்பு வெங்கடேசனையும் அவரது மனைவியும் தொடர்ந்து அவர்களது வாழ்க்கையில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட காரணமாக இருந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக வெங்கடேசன் தனது முகநூல் பக்கத்தில் பாஜகவை பற்றி ஒரு சில கருத்துக்களை தெரிவித்து இருந்ததால் பாஜாகவினர் வெங்கடேசிற்குக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கார் டிரைவர் மோகன் மற்றும் வெங்கடேசனின் மனைவி, அவரது அக்கா மகன் ராஜ்குமார் ஆகியோர் இணைந்து கூலிப்படையினரை ஏற்பாடு செய்து வெங்கடேசின் கால்களை உடைத்து விட்டு, அந்த இடத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கொடியை வீசி சென்றால் இந்த வழக்கு பாரதிய ஜனதா கட்சியினருக்கு அவ பெயரை ஏற்படுத்தும் என்ற நோக்கத்தில் இந்த நாடகத்தை நடத்தி உள்ளார்கள்.

ஆனால் காவல்துறையின் அதிரடி விசாரணையில் இவர்களது கூட்டு சதி அம்பலம் ஆகியுள்ளது. இருந்த போதிலும் காதல் மனைவியே ஈவு இரக்கமில்லாமல் மக்களை மகிழ்வித்த கலைஞர் வெங்கடேஷனின் கால்களை உடைத்தது பொது மக்களிடையே மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பாஜகவுடன் கூட்டணி வைப்பதும், பாடையில் உட்காருவதும் ஒன்ணுதான் : பரபரப்பை கிளப்பிய திமுக பேச்சாளர்!

பொள்ளாச்சி அடுத்த பெரிய நெகமம் நாகர் மைதானத்தில் இன்று தமிழக முதல்வரின் 72வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல்…

34 minutes ago

நண்பனின் தங்கைக்கு மோசமான மெசேஜ்.. வீட்டுக்கே சென்ற அத்துமீற முயன்ற VIRTUAL WARRIORS!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…

2 hours ago

ஓடும் ரயிலில் நடந்த கொடூரம்! பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான மாளவிகா மோகனன்? அடக்கடவுளே!

ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…

3 hours ago

கைமாறியது விஜய் டிவி… கோபிநாத், பிரியங்கா, மகாபா ஆனந்தை நீக்க முடிவு!

விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…

3 hours ago

டாஸ்மாக்கில் ஆண்டுக்கு ரூ.5,400 கோடி ஊழல்? இபிஎஸ் குற்றச்சாட்டு!

டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…

3 hours ago

சமந்தாவின் மூன்றாவது காதலர்? விரைவில் டும் டும் டும்! அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி கொடுக்குறாரே?

தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…

3 hours ago

This website uses cookies.