தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் நட்சத்திர நடிகையாகும் அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.
நடிகை சமந்தா ஹே மாயா சேஷாவே திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அப்படத்தின் இளம் ஹீரோவாக நடித்த நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வந்தார். கிட்டத்தட்ட 8 வருடங்களாக இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்த திருமணத்திற்கு பிறகு மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்த இந்த ஜோடி நான்கு வருடத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். ரசிகர்களின் பேவரைட் ஜோடியாக பார்க்கப்பட்ட இவர்களின் விவாகரத்து அவர்களின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது.
இன்று வரை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சமந்தா திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடிக்க ஆரம்பித்து பாலிவுட் சினிமாவிலும் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். இப்படியான சமயத்தில் நாக சைதன்யா பிரபல நடிகையான சோபிதா துலிபாலாவை ரகசியமாக சில வருடங்கள் டேட்டிங் செய்து காதலித்து வந்தார்.
அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான போதிலும் நாங்கள் காதலிக்கவில்லை என மறுத்தனர். பின்னர் திடீரென கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி இவர்களின் நிச்சயதார்த்தம் நாகார்ஜுனாவின் வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் இரு வீட்டாரின் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சமந்தாவை வைத்து சாகுந்தலம் திரைப்படத்தை தயாரித்திருந்தவர் தான் நீலிமா இவர் சமந்தா குறித்து பேசும் போது நான் சாகுந்தலம் படத்தின் கதையை குறித்து கலந்த ஆலோசிக்க சமந்தாவை நேரில் சென்று சந்தித்தேன். அப்போது அந்த படத்தின் கதை கேட்டு அவர் மிகவும் பிடித்து விட்டது. நான் ஒப்பந்தம் செய்து கொள்கிறேன். ஆனால் இந்த படத்தை ஜூலை முதல் ஆகஸ்ட் மாதத்துக்குள் எடுத்து முடித்து விடுங்கள் என கூறினார்.
அதற்கான காரணம் இந்த படத்தை முடித்து விட்ட உடனே நான் குழந்தை பெற்றுக் கொண்டு கணவரோடு செட்டிலாகி நேரத்தை செலவழிக்க விரும்புகிறேன் என சமந்தா கூறி இருந்தார். எனவே சமந்தா அந்த சமயத்தில் நாக சைத்தன்யாவின் குழந்தையை தன்னுடைய கருவில் சுமந்து கொண்டிருந்தார் என தயாரிப்பாளர் நீலிமா கூறி இருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் சமந்தா நாக சைதன்யாவின் குழந்தைக்கு தாயான பிறகும் ஏன் விவாகரத்து செய்தார்கள்? அந்த குழந்தை என்ன ஆனது? கருவிலே கலைத்து விட்டார்களா? நாகார்ஜூனா வீட்டில் சமந்தாவுக்கு நடந்தது என்ன? என பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
This website uses cookies.