நடிகை ஜோதிகா கணவர் சூர்யா மற்றும் குழந்தைகளுடன் மும்பைக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார். அங்கு தொடர்ச்சியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வரும் ஜோதிகா நடிகர் மாதவன் மற்றும் அஜய் தேவ்கான் நடிப்பில் அண்மையில் வெளிவந்த சைத்தான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை சந்தித்தது. அதை ஸ்ரீகாந்த் என்ற திரைப்படத்தில் ஜோதிகா நடித்திருந்தார் . அந்த படமும் தியேட்டரில் வெளியாகி ஓரளவுக்கு நல்ல விமர்சனத்தை பெற்றது. ஜோதிகா மட்டுமல்லாமல் சூர்யாவும் ஹாலிவுட் இயக்குனர் உடன் புது படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளார். கிட்டத்தட்ட அந்த படம் உறுதியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இப்படியாக அவர்கள் இருவரும் பாலிவுட் சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வரும். நிலையில் ஜோதிகா தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். அண்மையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற பிலிம்பேர் விருது விழாவிற்கு வந்திருந்த ஜோதிகா கருப்பு பிளேசர் போட்டுக்கொண்டு உள்ளே இருந்த உள்ளாடை ஓப்பனாக காட்டி அப்பட்டமாக முன்னழகு தெரியும் படி மீடியாக்களுக்கு போஸ் கொடுத்து இருந்தார்.
அதுதான் சமூக வலைத்தளங்கள் முழுக்க பெரும் சர்ச்சைக்குள்ளான விஷயமாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் ஒருவரிடம் நடிகை ஜோதிகா சிவகுமார் குடும்பத்திற்கு தற்போது பெரும் பிரச்சினையாக இருக்கிறாரோ என கேள்வி கேட்டதற்கு… அவர் கார்த்தியின் மனைவியால் குடும்பத்திற்கு எந்த விதமான பிரச்சினையும் இல்லை.
ஏனென்றால் அவர் சினிமா பக்கமே தலை காட்டாத ஒரு பெண்… சினிமா வாசமே இல்லாதவர். ஆனால் ஜோதிகா அப்படி இல்லை… திடீரென நடிக்க போறேன்னு கிளம்பி வந்துட்டாங்க.. மும்பைக்கு போய் செட்டில் ஆகிட்டாங்க…. கவர்ச்சியான உடைகளில் வந்து முகம் சுளிக்க வைக்கிறாங்க. எனவே ஜோதிகா தான் சிவக்குமார் வீட்டுக்கு பெரும் தலைவலியாக அப்போதிலிருந்து இப்போது வரை இருந்து வருகிறார் என அந்த பிரபல பத்திரிகையாளர் ஒருவர் ஜோதிகாவை கடுமையாக சாடி இருக்கிறார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.