முதுகில் குத்திய முரளி.. சினிமாவே வேண்டாம் என்று தெறித்து ஓடிய பிரபல நடிகையின் கணவர்..!

தமிழ் சினிமாவின் கருப்பு வைரம் என பெண் ரசிகைகளால் அதிகம் விரும்பப்பட்டவர் நடிகர் முரளி. கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த இவர் 60க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். பூவிலங்கு எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமான இவர் “கடல் பூக்கள்” என்ற திரைப்படத்தில் நடித்து பேமஸ் ஆனார்.

இவர் ஷோபா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இருக்கு அதர்வா, ஆகாஷ், காவ்யா என மூன்று பிள்ளைகள். இதில் அதர்வா பிரபலமான நடிகராக பார்க்கப்படுகிறார். ஆகாஷ் தற்போது புதிய படங்களில் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார்.

இதனிடையே, 25 வருட நண்பரான முரளியே என்னை ஏமாற்றி விட்டார் என்று மனவேதனையில் இயக்குனர் ராஜகுமாரன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா மிகப் பிரபலமான இயக்குனராக திகழ்ந்தவர் ராஜகுமாரன். இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் 1999 ஆம் ஆண்டு வெளிவந்திருந்த நீ வருவாய் என என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

ராஜகுமாரன் அளித்த பேட்டியில், நடிகர் முரளியும் நானும் 25 வருட நண்பர்கள். அவர் நடித்த முதல் படத்திலிருந்து நான் அவருடன் பணியாற்றி இருக்கிறேன். அப்போதிலிருந்தே முரளியுடன் எனக்கு நல்ல பழக்கம் இருந்தது. நல்ல நண்பர்களாக இருந்தோம். அப்படி இருந்தும் அவர் நான் எடுத்த படத்தின் போது ஒழுங்காக சூட்டிங் வரவில்லை. ரொம்ப கஷ்டம் கொடுத்து விட்டார். ரொம்ப தவறாக தொழில் ரீதியாக நடந்து கொண்டார்.

அதனால்தான் நான் சினிமாவை போடா என்று ஒதுக்கி வைத்து விட்டேன். நல்லா தெரிந்த நெருங்கிய நண்பனே கஷ்டம் கொடுத்தால் மன வேதனை ஏற்படும். நான் 30 வருடமாக சினிமா உலகில் இருக்கிறேன். இதுவரை நான் 10 லட்சம் கூட சம்பாதித்து இருக்க மாட்டேன். பணத்திற்காக நான் சினிமாவில்இருக்கவில்லை. அதன் மீது உள்ள காதலினால் தான் நான் சினிமாவிற்கு வந்தேன். அதேபோல் விஜயகுமார் சாரூம் என்னிடம் அருண் விஜய் பற்றி கேட்டிருந்தார்.

படமெடுக்க சொன்னார். நான் முடியாது, இப்ப நான் படம் பண்ணுவதில்லை என்று சொல்லிவிட்டேன். அது மட்டும் இல்லாமல் நான் சில புத்தகங்களை படித்திருந்ததால் எனக்கு ஜாதகம் பற்றி ஒரு அளவு தெரியும். அப்போது அவரிடம் 20 வருடங்களுக்கு பிறகு தான் உங்களுடைய மகனின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். அதேபோல் தற்போது அவர் வில்லனாகவோ,ஹீரோவாகவோ மக்கள் மத்தியில் பதிந்திருக்கிறார் என்று பல சுவாரஸ்யமான விஷயங்களை ராஜகுமாரன் பேசியிருக்கிறார். மேலும், இயக்குனர் ராஜகுமாரன் இயக்கத்தில் முரளி நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளியாகி இருந்த படம் காதலுடன் என்பது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

2 days ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

2 days ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

2 days ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

2 days ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

2 days ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

2 days ago

This website uses cookies.