திருச்சியில் நடைபெற்ற 47வது தமிழ்நாடு மாநில துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பதக்கங்களை நடிகர் அஜித்குமார் குவித்துள்ளார்.
திருச்சி கேகே நகரில் உள்ள காவல்துறையினருக்கு சொந்தமான திருச்சி ரைபிள் கிளப்பில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 25ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. போட்டிகள் ரைபில் மற்றும் பிஸ்டல் பிரிவுகளில் கீழ் நடைபெறுகிறது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட துப்பாக்கி சுடும் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில், கார் மற்றும் பைக் போட்டிகளில் பங்கேற்கும் நடிகர் அஜித்குமார் துப்பாக்கி சுடும் போட்டியிலும் பங்கேற்றார். அவர் 10மீ, 25 மீ மற்றும் 50மீ பிஸ்டல் பிரிவுகளில் கலந்து கொண்டார்.
இந்தப் போட்டிகளில் அவர் கலந்து கொள்வதை அறிந்த ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. போலீசார் அவர்களை கட்டுப்படுத்தி அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில், துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 4 தங்கப் பதக்கங்கள் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை நடிகர் அஜித் வென்றுள்ளார்.
இதில், நடிகர் அஜித்குமார் அணி, சென்டர் ஃபயர் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கமும், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கமும், 50 மீட்டர் பிரீ பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் பிரிவில் தங்கப் பதக்கமும், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் பிரிவில் தங்கப் பதக்கமும், 50 மீட்டர் பிரீ பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கலப் பதக்கமும், ஸ்டாண்டர்டு பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கலப் பதக்கம் என நான்கு தங்கம், இரண்டு வெண்கலப் பதக்கம் என மொத்தமாக அவரது அணி 6 பதங்களை வென்றுள்ளனர்.
அதற்கான பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் அவரது அணியினரிடம் நேற்று வழங்கப்பட்டது என திருச்சி மாநகர காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.