இது வேலைக்கே ஆகாது… “விடாமுயற்சி” படத்தில் இருந்து விலகிய திரிஷா?

தல அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். மகழ் திருமேனி இயக்கிவரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. பல பிரச்சனைகளுக்கு மத்தியில் இப்படத்தின் ஷூட்டிங் இடைவெளி விட்டு இடைவெளி விட்டு நடைபெற்று வருகிறது. இந்த பிப்ரவரி மாதம் இறுதி வரை இப்படத்தின் ஷூட்டிங் நடைபெறும் என தகவல் வெளியாகியது.

ஆனால், இதுவரை இப்படத்தை குறித்த எந்த ஒரு அப்டேட்டும் பெரிதாக வராததால் அஜித் ரசிகர்கள் வேதனையில் இருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரையும் குஷி படுத்தும் வகையில் தற்ப்போது அஜித்தின் அடுத்த திரைப்படமான ஏகே 63 படத்தின் மாஸான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

ஆம், நடிகர் பிரபுவின் மருமகனான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்திதை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. இந்த பூஜையில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும் அவருடைய டீம் கலந்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் முடிவில் அல்லது ஏப்ரல் மாதம் துவக்கத்தில் ஆரம்பம் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்திற்காக அஜித் ரூ. 163 கோடி சம்பளம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை விடாமுயற்சி படத்தின் அப்டேட் எதுவும் வெளிவராததால் அஜித் ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ஒரு வேலை அஜித் சரியாக ஒத்துழைப்பு தராமல் இழுத்தடித்தடித்ததால் படப்பிடிப்பு தள்ளி செல்கிறதா என கேள்வி எழுப்பப்படும் நேரத்தில் தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது, தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து நிதி நெருக்கடி இருப்பது தான், படப்பிடிப்பு தாமதம் ஆவதாக சொல்லப்படுகிறது.

ஷூட்டிங்கிற்கு ஒரு நாளைக்கு தயாரிப்பு செலவு மட்டுமே ரூ. 50 லட்சம் ஆகிறதாம். இதனால் தயாரிப்பு நிறுவனத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் படப்பிடிப்பு தொடர்ந்து தாமதமாகி வருகிறதாம். இதனால் அஜித் விடாமுயற்சி படத்தை அப்புறப்படுத்திவிட்டு ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் துவங்கவுள்ள படத்தில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியானது.

இப்படியான நேரத்தில் சற்றுமுன் கிடைத்த தகவலின் படி , திரிஷா விடாமுயற்சி படத்தில் இருந்து .விலகிக்கொள்ள முடிவெடுத்துள்ளதாக செய்திகள் கூறுகிறது. காரணம், விடாமுயற்சி படத்தின் அடுத்த ஷெட்யூல் தொடங்க மேலும் தாமதம் ஆகும் சூழல் நிலவுகிறதாம். இதனால் திரிஷாவுக்கு கால்ஷீட் இடிக்கிறதாம். விடாமுயற்சி படத்தை தாண்டி கமல் ஹாசன் உடன் தக் லைஃப், சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இப்படி தொடர்ந்து பிஸியாக இருக்கும் அவர் விடாமுயற்சி படத்துக்கும் தேதி ஒதுக்கியும் அது தொடர்ந்து தள்ளிப்போனதால் தனது அடுத்தடுத்த திரைப்படங்களின் கால்ஷீட் பிரச்சனை ஏற்படுகிறதாம்.

இப்போதைக்கு தக் லைஃப், விஸ்வம்பரா படத்துக்கான தேதிகள் மட்டுமே திரிஷாவிடம் இருப்பதால்; விடாமுயற்சி படத்தில் இருந்து விலகிக்கொள்ள முடிவெடுத்தாராம். அதன் பின்னர் அஜித் தான் நேரடியாக திரிஷாவிடம் பேசி சமரசம் செய்ததாக கூறப்படுகிறது. பின் மனம் மாறிய திரிஷா கமல் ஹாசனின் தக் லைஃப், விஸ்வம்பரா உள்ளிட்ட திரைப்படங்களின் ஷெட்யூல் முடித்துவிட்டு விடாமுயற்சி ஷெட்யூலுக்கு அவர் ஒத்துக்கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது.

UpdateNews360 Rajesh

Recent Posts

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

7 hours ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

7 hours ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

8 hours ago

போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க வந்த பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…

8 hours ago

திடீரென ரஜினி கொடுத்த பரிசு.. ஆச்சரியத்தில் ஆடிப்போன இயக்குநர்..!!

இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…

8 hours ago

அடுத்தடுத்து மாயமான இளைஞர்கள் கொன்று புதைப்பு.. வெளியான பகீர் தகவல்!

கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…

9 hours ago

This website uses cookies.