நடிகை திரிஷா 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவர். சிறிய பிரேக் இவருக்கு திரை உலகில் ஏற்பட்ட பிறகு தற்போது, பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் மிகப் பெரிய கம்பேக்கை கொடுத்திருக்கிறார் என்று கூறலாம்.
மேலும் படிக்க: வங்கால முதல்வர் கமலுக்கு நான்காவது திருமணம் – வெளியான போஸ்டர்..!
இந்த திரைப்படத்தில், குந்தவை பிராட்டியாக இவர் நடித்திருந்ததை பார்த்து ரசிகர்கள் ஆரம்ப காலத்தில் திரிஷா எப்படி உடலை பிட்டாக வைத்திருந்தாரோ அது போலவே இந்த படத்திலும் ஜொலிப்பதாக கூறினார்கள். இதனிடையே, தமிழை தாண்டி தொலுங்கிலும் இப்போது படங்களில் கமிட்டாகி வருகிறார் திரிஷா. சிரஞ்சீவி படத்தில் அவருக்கு ஜோடியாக 18 ஆண்டுகளுக்குப் பிறகு நடிக்க உள்ளார்.
இந்த நிலையில், பொதுவாக தென்னிந்திய சினிமாவில் ஹீரோக்களுக்கு நடுவில் போட்டி இருப்பது போலவே ஹீரோயின்களுக்கு நடுவிலும் போட்டி நிலவி தான் வருகிறது. குறிப்பாக, சம்பள விஷயத்தில் தான் யார் முன்னணி என்கிற பேச்சு எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், நயன்தாரா தான் 10 கோடி ரூபாய் சம்பளம் பெற்று தற்போது வரை முன்னணியில் இருந்து வந்தார்.
மேலும் படிக்க: No சொன்ன கரீனா கபூர்.. மாஸ் நடிகரின் அடுத்த படத்தில் நயன்தாராவுக்கு இப்படி ஒரு கேரக்டரா?..
தற்போது பிஸியாக படங்களில் நடித்து வரும் த்ரிஷாவிடம் அஜித்துடன் விடாமுயற்சி, கமலுடன் தக் லைப் போன்ற படங்கள் கைவசம் உள்ளது. இந்நிலையில், திரிஷா கமலின் தக் லைப் படத்திற்காக 12 கோடி ரூபாய் சம்பளம் பெற இருப்பதாகவும், இதன் மூலம் அவர்தான் இனி தென்னிந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ளார். இதன் மூலம் நயன்தாராவை திரிஷா ஓரங்கட்டி டாப் ஹீரோயின் இடத்தை பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவருடைய சொத்து மதிப்பு ரூ. 100 கோடி முதல் ரூ. 110 கோடி வரை இருக்குமாம்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பழைய நகரத்தை சேர்ந்த கணேஷ், ஜோஸ்னாவும் வேலைக்காக பெங்களூரு சென்றனர். இவர்களுக்கு அனந்தபூர் மாவட்டம் குந்தகல்லை…
நடிகர் விக்ரம் கடின உழைப்புக்கு பெயர் போனவர். பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்த விக்ரம், தனக்கான வாய்ப்பை தேடி…
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
This website uses cookies.