நடிகை திரிஷா 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவர். சிறிய பிரேக் இவருக்கு திரை உலகில் ஏற்பட்ட பிறகு தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் மிகப் பெரிய கம்பேக்கை கொடுத்திருக்கிறார் என்று கூறலாம்.
இந்த திரைப்படத்தில் குந்தவை பிராட்டியாக இவர் நடித்திருந்ததை பார்த்து ரசிகர்கள் ஆரம்ப காலத்தில் திரிஷா எப்படி உடலை பிட்டாக வைத்திருந்தாரோ அது போலவே இந்த படத்திலும் ஜொலிப்பதாக கூறினார்கள்.
இதனிடையே, 2007ல் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த தெலுங்கு படம் Aadavari Matalaku Arthale Verule. அதில் வெங்கடேஷ் மற்றும் த்ரிஷா ஆகியோர் நடித்து இருந்தனர்.
Aadavari Matalaku Arthale Verule படம் தமிழில் ‘யாரடி நீ மோகினி’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. அதில் தனுஷ் மற்றும் நயன்தாரா இருவரும் நடித்து இருந்தனர். 2013ல் Aadavari Matalaku Arthale Verule படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க விரும்புவதாக செல்வராகவன் ட்விட்டரில் த்ரிஷாவிடம் கேட்டிருக்கிறார்.
இதனிடையே, 10 வருடங்கள் கழித்து செல்வராகவனுக்கு தற்போது, ட்விட்டரில் த்ரிஷா பதில் கூறி இருக்கிறார். நான் ரெடி என அவர் தெரிவித்து இருக்கிறார். ஏற்கனவே, செல்வராகவன் பல sequel படங்களுக்கு தயாராகி வரும் நிலையில், அந்த லிஸ்டில் யாரடி நீ மோகினி படமும் இணைய வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.