நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (கோட்) திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படத்தை விஜய் ரசிகர்கள் தியேட்டரில் சென்று பார்த்து திருவிழா போல் கொண்டாடி வருகிறார்கள்.
பெரும்பாலும் விஜய்யின் திரைப்படங்களில் குத்து பாடல்களுக்கு பிரபலமான நடிகைகள் வந்து அவருடன் குத்தாட்டம் போடுவது வழக்கமான ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது. ஆம்,முன்னதாக “உன் தங்க நிறத்துக்கு தான் தமிழ்நாட்டை எழுதி தரட்டுமா” என்ற பாடலுக்கு நடிகை ரோஜா குத்தாட்டம் போட்டு இருப்பார்.
அதேபோல் ஷாஜகான் படத்தில் வரும் “சரக்கு வச்சிருக்கேன்” பாடலில் நடிகை மீனா குத்தாட்டம் போட்டு இருப்பார். தொடர்ந்து “ஆல் தோட்ட பூபதி” பாடலில் நடிகை சிம்ரன் விஜய்க்கு ஈடு கொடுத்து பயங்கரமாக ஆடி இருப்பார். அதேபோல் திருமலை திரைப்படத்தில் “ஜக்கம்மாவாக” நடிகை கிரண் அதிரடி ஆட்டம் ஆடியிருப்பர்.
மேலும் சிவகாசி திரைப்படத்தில் நடிகை நயன்தாரா “கோடம்பாக்கம் ஏரியா” பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்டு இருப்பார். இப்படியாக தொடர்ந்து விஜய் திரைப்படங்களில் குத்து பாடல்களில் கட்டாயம் ஒரு பிரபலமான ஹீரோயின் நடனமாடி விடுவார்கள்.
அந்த வகையில் கோட் திரைப்படத்தில் நடிகை திரிஷா விஜய்யுடன் சேர்ந்து மரண குத்து டான்ஸ் ஆடியுள்ளார். இந்நிலையில் இந்த பாடலுக்கு குத்தாட்டம் போட திரிஷா வாங்கிய விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 10 முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கும் திரிஷா ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளாராம். ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.