ஒரு கட்டத்தில் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் தான் நடிகர் திரிஷா. பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக நடித்து ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர் தான் திரிஷா.. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
பின்னர் சினிமாவில் இளம் நடிகைகளின் அதிகம் வரத் தொடங்கியதால், இவருக்கு படவாய்ப்புகள் குறைந்து போனதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இவர் நடித்த திரைப்படங்கள் சில தோல்வியை தழுவியதாலும் படங்கள் வாய்ப்பு குறைந்தன என்றும் தெரிகிறது. இதற்கு முக்கிய காரணம் நயன்தாராவை போன்று நடிகைக்கு ஏற்ற படங்களில் ஹீரோயினாக நடிக்க ஆசைப் பட்டது தான்.
தற்போது, தமிழ் சினிமாவில் அசுர வளர்ச்சி பெற்றிருப்பவர் தான் நடிகர் நயன்தாரா. ஆரம்பத்தில் வழக்கமான ஹீரோயின்களை போன்று நடித்து வந்த இவர் தற்போது கதையின் நாயகியாக பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவர் நடித்த கோலமாவு கோகிலா, மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண் உள்ளிட்ட பல திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இதனால் இவர் தற்போது இருக்கும் நடிகைகளிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகயும், லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.
இதைப் பார்த்துதான் தற்போது திரிஷா, நயன்தாரா மீது உச்சகட்ட வெறுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. நயன்தாராவுக்கு முன்பே தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அப்படி இருக்கும்போது அவருக்கு பின்னால் நடிக்க வந்த நயன்தாரா இன்று புகழின் உச்சியில் இருக்கிறார் என்ற ஆதங்கம் தான் அவரின் கோபத்திற்கு காரணமாம்.
இதனால், திரிஷாவிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் கதை கேட்காமல் நயன்தாராவை பற்றி புலம்பி வருகிறார். நயன்தாரா நடித்து தோல்வி அடைந்த சில படங்களின் பெயர்களை கூறி அவரை எப்படி லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லலாம் என்று கேட்டு வருகிறாராம்.
முன்னர் திரிஷா நடிக்கும் திரைப்படங்களுக்கு எல்லாம் அவருடைய அம்மாதான் கதை கேட்டு முடிவு செய்வார். ஆனால் இப்போது திரிஷாவே நேரடியாக கதையை கேட்க ஆரம்பித்துவிட்டார். எப்படியாவது நயன்தாராவை பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்ற நோக்கம்தானாம்..
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…
90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் திரைப்படம் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த “வாரணம் ஆயிரம்” திரைப்படத்தை 90களில் பிறந்தவர்களால் மறக்கவே…
This website uses cookies.