ஒரு கட்டத்தில் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் தான் நடிகர் திரிஷா. பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக நடித்து ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர் தான் திரிஷா.. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
பின்னர் சினிமாவில் இளம் நடிகைகளின் அதிகம் வரத் தொடங்கியதால், இவருக்கு படவாய்ப்புகள் குறைந்து போனதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இவர் நடித்த திரைப்படங்கள் சில தோல்வியை தழுவியதாலும் படங்கள் வாய்ப்பு குறைந்தன என்றும் தெரிகிறது. இதற்கு முக்கிய காரணம் நயன்தாராவை போன்று நடிகைக்கு ஏற்ற படங்களில் ஹீரோயினாக நடிக்க ஆசைப் பட்டது தான்.
தற்போது, தமிழ் சினிமாவில் அசுர வளர்ச்சி பெற்றிருப்பவர் தான் நடிகர் நயன்தாரா. ஆரம்பத்தில் வழக்கமான ஹீரோயின்களை போன்று நடித்து வந்த இவர் தற்போது கதையின் நாயகியாக பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவர் நடித்த கோலமாவு கோகிலா, மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண் உள்ளிட்ட பல திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இதனால் இவர் தற்போது இருக்கும் நடிகைகளிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகயும், லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.
இதைப் பார்த்துதான் தற்போது திரிஷா, நயன்தாரா மீது உச்சகட்ட வெறுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. நயன்தாராவுக்கு முன்பே தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அப்படி இருக்கும்போது அவருக்கு பின்னால் நடிக்க வந்த நயன்தாரா இன்று புகழின் உச்சியில் இருக்கிறார் என்ற ஆதங்கம் தான் அவரின் கோபத்திற்கு காரணமாம்.
இதனால், திரிஷாவிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் கதை கேட்காமல் நயன்தாராவை பற்றி புலம்பி வருகிறார். நயன்தாரா நடித்து தோல்வி அடைந்த சில படங்களின் பெயர்களை கூறி அவரை எப்படி லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லலாம் என்று கேட்டு வருகிறாராம்.
முன்னர் திரிஷா நடிக்கும் திரைப்படங்களுக்கு எல்லாம் அவருடைய அம்மாதான் கதை கேட்டு முடிவு செய்வார். ஆனால் இப்போது திரிஷாவே நேரடியாக கதையை கேட்க ஆரம்பித்துவிட்டார். எப்படியாவது நயன்தாராவை பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்ற நோக்கம்தானாம்..
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.