நடிகர் தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இளையராஜாவின் பயோபிக் திரைப்படத்தில் கமிட்டாகி உள்ளார். அதறகான வேலைகள் பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்பது தனுஷின் நீண்ட நாள் ஆசை கனவாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் இளையராஜாவின் பயோ பிக் திரைப்படம் சமீபத்தில் டிராப் ஆகிவிட்டதாக கூறப்பட்டது ஆனால் தனுசுக்கு இந்த திரைப்படத்தை .கைவிடுவதற்கு மனசு இல்லையாம் இதற்காக அவர் சரியான தயாரிப்பு நிறுவனத்தை தேடி வருவதாக கூறப்படுகிறது .
இதனிடையே என்னை வைத்து படம் எடுக்கும் நீங்கள் அடுத்த ஒரு வருடம் என்கூடவே தான் இருக்க வேண்டும். நான் எப்போதெல்லாம் அழைக்கிறானோ அப்போதெல்லாம் வர வேண்டும் எனக்கு என்னென்ன நினைவிற்கு வருகிறதோ அந்த விஷயங்களை எல்லாம் நான் அப்பப்போ உங்களுக்கு சொல்கிறேன் அதை நோட் பண்ணிக்கோங்க என்று இளையராஜா இயக்குனர் அருண் மாதேஸ்வரனிடம் கூறி இருக்கிறார்.
இதனால் அடுத்த ஒரு வருடம் இளையராஜாவின் பின்னாலே குட்டி போட்ட பூனை போல அருள் மாதேஸ்வரன் சுற்றித் திரிய வேண்டுமா? என்று யோசனையில் படத்தை எடுக்கலாமா இல்லை கைவிட்டு விடலாமா என்ற ஒரு யோசனையில் இருக்கிறாராம்.
இளையராஜாவை வைத்து படமே எடுக்க முடியவில்லை என அவர் தான் எடுத்த முடிவு தவறாகி விட்டதே என புலம்புகிறாராம். அது மட்டும் இல்லாமல் இளையராஜாவுக்கு எப்போ கோபம் வரும் என்று யாருக்குமே தெரியாது. இதனால் படத்தை எடுக்கலாமா வேண்டாமா என்ற ஒரு முடிவில் அருண் மாதேஸ்வரன் இருக்கிறாராம்.
இளையராஜா தன்னை பற்றிய விஷயம் சொல்லும்போதே பல நிகழ்வுகள் அவருக்கு ஞாபகம் வருவது இல்லையாம். அதனால் ஞாபகத்திற்கு வரும் போதெல்லாம் உன்னை அழைக்கிறேன். நீ அப்பப்போ வந்து எழுதி கொண்டு செல் என்று சொல்கிறாராம் .
இதனால் அருள் மாதேஸ்வரன் படத்தை எடுப்பதா? இல்லை சினிமா துறையே விட்டு விட்டு ஓடி விடுலாமா? என குழப்பத்தில் இருக்கிறாராம். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டாராம். ஆனால் தனுஷ் இந்த படத்தை விடவே கூடாது எப்படியாவது எடுத்தாக வேண்டும் என அடம் பிடித்துக் கொண்டிருக்கிறாராம்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.