சின்னத்திரை நடிகரின் மகன் நேற்று தீபாவளி கொண்டாட்டத்திற்காக கைரில் சென்ற போது விபத்து ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னத்திரை நடிகர் கார்த்திக். இவரது மகன் நிதிஷ். கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.
நேற்று தீபாவளிக்காக காலை முதல் வீட்டில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிதிஷ், மாலை நேரத்தில் தனது காரில் நண்பர்களுடன் விளையாட்டு திடலுக்கு சென்றுள்ளார்.
பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வேளச்சேரி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்தானது.
இதையும் படியுங்க: போட்றா வெடிய… வசூலில் பிரம்மாண்ட படத்தை முந்திய அமரன்…!!
பின்னர் அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் நிதிஷ் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தடுப்பு சுவரில் மோதிய போது கார் ஓட்டுநரின் பகுதி நொறுங்கியது. காரை ஓட்டியது நிதிஷ் என்பதால் அவருக்கு காயம் அதிகமாக ஏற்பட்டதே இறப்பிற்கு காரணம் என கூறப்படுகிறது.
சாலையில் போக்குவரத்து இல்லாததால் நிதிஷ் காரை வேகமாக ஓட்டியதே விபத்திற்கு காரணம் என போலீசார் கூறுகின்றனர்.
சின்னத்திரை நடிகர் மகன் விபத்தில் உயிரிழந்தது சின்னத்திரை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று பிற்பகல் நிதிஷ் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.