5000, 10,000 ஆயிரம் கோடி.. விஜய் குறித்து தொண்டர்கள் மத்தியில் உளறிய புஸ்ஸி ஆனந்த்..!

Author: Vignesh
8 ஜூலை 2024, 3:13 மணி
Vijay - Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கக்கூடிய விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை கடந்த ஆண்டு ஆரம்பித்தார். தன்னுடைய கட்சியை ஆரம்பித்ததும், பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வண்ணம் பரிசுத்தொகைகளை வழங்கி கௌரவித்து வருகிறார். இந்த ஆண்டும் அதேபோல 10 மற்றும் 12ஆம் வகுப்பில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. திருவான்மியூரில், இருக்கும் ஒரு மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வந்த மாணவர்களுக்கு விருது வழங்கினார் விஜய்.

Vijay - Updatenews360

இதற்கிடையில், தன்னுடைய வெற்றிக் கழகம் கட்சியின் சார்பாக பல்வேறு பணிகளை செய்து வருகிறார். சமீபத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கள்ளக்குறிச்சியில், நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அங்கு பேசி இருந்தார். அவர் அப்போது பேசுகையில், விஜய் ஐந்தாயிரம், பத்தாயிரம் கோடிகளை விட்டுவிட்டு மக்களுக்காக சேவை செய்கிறார். 2026 இல் தளபதி நம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக அமர வைக்க வேண்டும் என புஸ்ஸி ஆனந்த் பேசியிருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அஞ்சாயிரம், பத்தாயிரம் கோடியை விட்டுட்டாரா விஜய் என்று ஷாக்கிங் ரியாக்ஷனை கொடுத்து கலாய்த்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  • Samantha சமந்தா விவாகரத்து குறித்து பற்ற வைத்த அமைச்சர்… திடீர் பல்டி : பரபரப்பு பேட்டி!
  • Views: - 120

    0

    0