வட கொரியாவில் K-Drama series என்று உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்படும் கொரிய நாடகங்களைப் பார்ப்பது அல்லது விநியோகிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.
வட கொரியாவின் ரியாங்காங் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் 16 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் சேர்ந்து, கடந்த அக்டோபர் மாதம் பல தென் கொரிய மற்றும் அமெரிக்க திரைப்படங்கள், வெப்சீரிஸ்களை பார்த்ததாக கூறப்படுகிறது.
இரு சிறுவர்களுக்கும் அதே நகரத்தில் உள்ள ஒரு விமானநிலையத்தில் உள்ளூர்வாசிகள் முன்னிலையில் அதிகாரிகள் தூக்கு தண்டனையை நிறைவேற்றியதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் அக்டோபரில் நடந்ததாக கூறப்படும் நிலையில், ஆனால் இந்த கொலைகள் பற்றிய தகவல்கள் கடந்த வாரம்தான் வெளிவந்தன.
16 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்களும் தடையை மீறி திரைப்படங்களை பார்த்த குற்றத்திற்காக இந்த தண்டனை கொடுக்கப்பட்டதாகவும், இதன் தீவிரத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே அனைவரின் முன்னிலையில் தண்டனை கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
வடகொரியா கடந்தாண்டு, அதிபர் கிம் ஜாங் உன்னின் தந்தை, கிம் ஜாங் இல்லின் நினைவு தினத்தை முன்னிட்டு 11 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்திருந்தது.
அந்த காலகட்டத்தில், குடிமக்கள் சிரிக்கவோ, ஷாப்பிங் செய்யவோ அல்லது மது அருந்தவோ அனுமதிக்கப்படவில்லை.
வட கொரியா நாட்டில் கடந்த 2020இல், பிரபலமாகி வரும் கொரிய நிகழ்ச்சிகளை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அரசு அதனை தடை செய்தது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.