நடிப்பை விட அது மட்டும் தான் எல்லாம் ..! உலகத்தை புரிந்து கொண்டாரா உலக நாயகன்.?

நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், கதை-திரைக்கதை ஆசிரியர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், இலக்கியவாதி, அரசியல்வாதி எனப் பன்முகத் திறமைகொண்டவர் தான் நடிகர் கமல்ஹாசன்.ஆரம்ப காலத்தில் நடிகர் கமலஹாசன், தான் நடிக்கும் படங்கள் வெற்றியடையுதோ..? தோல்வி அடையுதோ..? தனது திறமையை மட்டுமே வெளிப்படுத்துவார். அந்த வகையில் அவர் விரும்பும் கலையை மதிப்பவர் என்று பலரும் சொல்வதை கேட்டிருப்போம். அதனால தான் என்னவோ அவரை உலகநாயகன் என்று பெயரை பெற்றுத் தந்தது.

ஆனால், கடந்த சில வருடங்களாகவே, அவரது நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவே சொல்லப்படுகிறது. அதாவது, சினிமாவைத்தாண்டி, விளம்பரங்கள், டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளர் நிகழ்ச்சிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதுவரை நடிப்பை தன் உயிர் கலையாக பார்த்து வந்த கமல், தற்போது வியாபார நோக்கத்துடன் பார்த்து வருவதாகவே கூறப்படுகிறது.மேலும், அவர், அரசியலில் ஈடுபடத்தொடங்கியதில் இருந்து, அவரின் கவனம் அனைத்து பணம் ஈட்டுவதில் தான் இருக்கிறது என்றும் அதன் மூலம் தற்போது அதிகளவில் லாபம் பார்த்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதனிடையே தனியார் தொலைக்காட்சியில் வெளியாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதன் மூலம், பெரிய தொகை கிடைத்து வருவதாகவும் தெரிகிறது.

மேலும், சினிமா படங்களில் தன்னை ஒரு பொருட்டாக மதிக்காமல் நடித்து வந்த சிவகார்த்திகேயனையே, தான் தயாரிக்கும் படத்தில் நடிக்க வைக்க முன் வந்தது பலரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிய சிவகார்த்திகேயனுக்கு வலை விரித்தது, அவரின் வியாபார யுக்த்தியை காட்டுவதாகவே தெரிகிறது. அது மட்டுமின்றி ஆடை ஏற்றுமதி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

மேலும், தனது பழைய படங்களில் சிறந்த படங்களின் ரீமேக் உரிமையையும் கைவசம் வைத்துள்ளாராம் கமல். இவரின் இந்த நடிவடிக்கைக்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை, ஆனால் அடுத்து வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்றால் பணம் தேவைப்படுகிறது. அதனால் தான் இப்படி பணம் சம்பாதித்து வருகிறாரா என்றும் இந்த உலகத்தில் பணத்திற்கு தான் மதிப்பு, நடிப்பிற்கு அல்ல என்று புரிந்து கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது. எது எப்படியோ. அவரின் திறமைகள் காலத்திற்கு அழியாதவை என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

UpdateNews360 Rajesh

Recent Posts

கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?

சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…

10 hours ago

ஒரே ஒரு டயலாக் பேசுனது குத்தமா? ஷூட்டிங் ஸ்பாட்டில் லெஃப்ட் ரைட் வாங்கிய கவுண்டமணி…

கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…

11 hours ago

விஜய் டிவி VJ பிரியங்காவுக்கு சைலண்டாக நடந்த 2வது திருமணம்? வெளியான புகைப்படம்!

விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…

12 hours ago

தர்பூசணியை தாராளமாக சாப்பிடலாம்… உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு புதிய சிக்கல்!

தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…

13 hours ago

லோகேஷிடமிருந்து அந்த நடிகருக்கு பறக்கும் ஃபோன் கால், ஆனா நோ ரெஸ்பான்ஸ்? அடப்பாவமே

லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…

13 hours ago

நான் தான் பா கராத்தே பாபு- ரவி மோகனுக்கு ஷாக் கொடுத்த அமைச்சர்! இதான் டிவிஸ்ட்டே

கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…

14 hours ago

This website uses cookies.